பெங்களூருவில் Razorpay, Paytm உள்ளிட்ட ஆன்லைன் கட்டண நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது..
சீன நபர்களால் இயக்கப்படும் கடன் செயலிகள் மூலம் சட்டவிரோதமாக வழங்கப்படும் உடனடி கடன்களுக்கு எதிராக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக இந்த சோதனை நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. அமலாக்கத்துறை இயக்குனரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கர்நாடக தலைநகர் பெங்களுருவில் உள்ள ஆறு வளாகங்களில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது.. இந்த சோதனை இன்னும் தொடர்ந்து வருகிறது..
சீன நபர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்களின் வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.17 கோடி மதிப்புள்ள நிதியை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.. இந்தியர்களின் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, அவர்களை போலி இயக்குநர்களாக மாற்றி பண மோசடி செய்வதே நிறுவனங்களின் செயல் முறை ஆகும்… இந்த நிறுவனங்கள் சீன நபர்களால் இயக்கப்படுகின்றன.. இந்த நிறுவனங்கள் தங்கள் சட்டவிரோதமான வணிகத்தை பல்வேறு வணிகர் ஐடிகள்/பேமெண்ட் கேட்வேகள்/வங்கிகளில் வைத்திருக்கும் கணக்குகள் மூலம் செய்து வருவது கவனத்திற்கு வந்துள்ளது. Razorpay Pvt Ltd, Cashfree Payments, Paytm Payment Services Ltd ஆகியவற்றின் வளாகங்கள் மற்றும் சீன நபர்களால் இயக்கப்படும் நிறுவனங்களில் சோதனை நடைபெறுகிறது..
விசாரணையின் கீழ் உள்ள நிறுவனங்கள் பல்வேறு வணிகர் ஐடிகள்/பணம் செலுத்தும் நுழைவாயில்கள்/வங்கிகளில் உள்ள கணக்குகள் இந்த குற்றத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.. மேலும் அவை MCA (கார்ப்பரேட் விவகார அமைச்சகம்) இணையதளம்/பதிவுசெய்யப்பட்ட முகவரியில் கொடுக்கப்பட்ட முகவரியிலிருந்து செயல்படமால், போலி முகவரியில் செயல்பட்டு வருகிறது..
மொபைல் மூலம் சிறிய தொகையை கடனா பெற்ற பொதுமக்களை மிரட்டி பணம் பறித்தல் மற்றும் துன்புறுத்துதல் தொடர்பாக ஏராளமான நிறுவனங்கள்/ நபர்கள் மீது பெங்களூரு போலீஸ் சைபர் கிரைம் போலீசார் பதிவு செய்த குறைந்தபட்சம் 18 எஃப்ஐஆர்களின் அடிப்படையில் பணமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.