#சேலம் :தாலிக்கயிறுடன் கல்லுாரிக்கு வந்த மாணவன்.. திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு..!

சேலம் மாவட்ட பகுதியில் உள்ள வாழப்பாடி கிராமத்தில், தேவேந்திரன் என்பவர் தனது மகன் ஆசீஸ்தேவ், 21 வசித்து வருகிறார். மகன் ஆத்துார், கொத்தாம்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லுாரியில், பி.ஏ., ஆங்கிலம் துறையில் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.


இந்த நிலையில் அதே கல்லுாரியில் பி.காம்., துறையில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த பெண்ணிடம் காதலிப்பதாக கூறியிருக்கிறார். அதற்கு மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். அதனால் கடந்த, 23 ஆம் தேதி அன்று தாலிக்கயிறுடன் கல்லுாரிக்கு மாணவன் வந்துள்ளார். 

அதனைப் பார்த்த ஆசிரியர்கள், மாணவரை கண்டித்ததுடன், பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து பெற்றோரும் அவரை கண்டித்த நிலையில், கடந்த 25ல், கல்லுாரிக்கு சென்ற மாணவர் திடீரென வகுப்பறையிலே வாந்தி எடுத்துள்ளார்.

இதனையடுத்து அவரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்த போது பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியிருப்பது தெரியவந்துள்ளது. அங்கே சிகிச்சை பெற்று வந்த மாணவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

பசுவுடன் உறவு கொண்ட காமுகன்..! 

Wed Nov 30 , 2022
கர்நாடக மாநில பகுதியில் உள்ள குடகு பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுவுடன் ‘உறவு’ கொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.குடகு என்ற பகுதியில் சுண்டிகொப்பாவில் அந்தகோவே கிராமத்தில் வசிப்பவர் விவசாயி தேவய்யா(45) என்பவர்.  இவர் தினமும் தனது பசுவை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வார். வழக்கம் போல் சென்ற 27ம் தேதி அன்று தனது பசுவை அருகில் இருக்கும் வயலில் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, சந்தைக்கு சென்றுள்ளார்.வேலைகளை முடித்து விட்டு சந்தையில் […]
n4469785721669787234144389cfcb4ff955e0cf803f9a1d695ff3530b42336ed0717916ff1d3d8362ff481

You May Like