சோகமான சம்பவம்…! ஹெலிகாப்டர்‌ விபத்து… 3 பேர் உயிரிழப்பு…! முதலமைச்சர் இரங்கல்…!

உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்‌ ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு ஆறுதல்‌ மற்றும்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை கொண்டுவர நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில்; உத்தரகாண்ட்‌ மாநிலம்‌ கேதார்நாத்தில்‌ நிகழ்ந்த ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ 7 பேர்கள்‌ உயிரிழந்தனர்‌. இதில்‌ தமிழ்நாட்டைச்‌ சேர்ந்த திருமதி. கலா ரமேஷ்‌, பிரேம்குமார்‌ வாஞ்சிநாதன், சுஜாதாபிரேம்குமார்‌ ஆகிய மூவரும்‌ கேதார்நாத்‌, பத்ரிநாத்‌ ஆகிய இடங்களுக்கு புனிதயாத்திரை சென்றபோது ஹெலிகாப்டர்‌ விபத்தில்‌ சிக்கி உயிரிழந்தனர்‌ என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும்‌ வேதனையும்‌ அடைந்தேன்‌.

உயிரிழந்தவர்களின்‌ குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்‌. இவ்விபத்தில்‌ உயிரிழந்தவர்களின்‌ உடல்களை சென்னைக்கு விரைந்து கொண்டு வருவதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

மத்திய அரசு வழங்கிய ரூ.2,000 பணம் வரவில்லையா...? உடனே இதை செய்து விடுங்கள்...!

Wed Oct 19 , 2022
விவசாயிகளுக்கும் விவசாயத் தொழிலுக்கும் உதவும் வகையில், மத்திய அரசு பி.எம் கிசான் திட்டத்தை கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆண்டும் தகுதியான விவசாய குடும்பங்களுக்கு ரூ .6,000 நிதியுதவியை மத்திய அரசு வழங்குகிறது. பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக 3 தவணைகளாக ரூ .2,000 உதவித்தொகை வழங்கபபடுகிறது. அதன் படி, இந்த ஆண்டு ஜூன் இறுதி வரை பிஎம் கிசான் திட்டத்தின் கோடிக்கணக்கான மக்கள் […]
farm loan

You May Like