வாக்காளர்கள் பட்டியலில் குளறுபடி..!! கோவையில் மறு வாக்குப்பதிவு..!! அண்ணாமலை அதிரடி..!!

கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை என்று அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை ராம்நகரில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கோவையில் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. ஒரு வீட்டில் கணவருக்கு ஓட்டு உள்ளது. மனைவிக்கு இல்லாத நிலை உருவாகியுள்ளது.

கணவருக்கு ஒரு வாக்குச்சாவடியிலும், மனைவிக்கு ஒரு வாக்குச்சாவடியிலும் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த பலரின் வாக்குரிமை மறுக்கப்பட்டுள்ளது. பல வாக்குச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை. பெயர்கள் நீக்கத்தில் அரசியல் இருக்குமோ என சந்தேகம் எழுகிறது. இவ்வாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு வாக்குப்பதிவு நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Read More : வாக்களித்துவிட்டு வந்ததும் பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்..!!

Chella

Next Post

’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

Fri Apr 19 , 2024
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வகையில், நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில் அவர், “இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு” என்று ஜாலியாக பாடல் எல்லாம் பாடினார். அப்போது […]

You May Like