’நீங்க ரொம்ப தொந்தரவு பண்றீங்க’..!! வடிவேலுவிடம் கடிந்து கொண்ட நபர்..!! சட்டென மாறிய முகம்..!!

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. காலை முதலே மக்கள் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். அந்த வகையில், நடிகர் வடிவேலு சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். ஒரு கட்டத்தில் அவர், “இந்திய நாடு என் வீடு, இந்தியன் என்பது என் பேரு” என்று ஜாலியாக பாடல் எல்லாம் பாடினார்.

அப்போது செய்தியாளர் எதோ கேட்க அதற்கு வடிவேலு, “என்னப்பா நான் சிவாஜி பாடல் தானே பாடினேன்.. அதை திரித்துவிட்டு வேறு மாதிரி மாத்தி விட்டறாதீங்க” என்று அவர் ஜாலியாக பேசினார். அப்போது உங்கள் படத்தில் மாற்றம் தான் மாறாதது என்ற வசனம் வரும்.. அதுபோல மாற்றம் வருமா என செய்தியாளர்கள் கேட்க, “அதை நீங்க கண்டுபிடிங்க” என்று சொல்லி நழுவிக்கொண்டார். அங்கிருந்த பலரும் வடிவேலு உடன் போட்டோ எடுத்தனர். அப்போது வடிவேலுவும் அவர்களுக்கு ஜாலியாக போஸ் கொடுத்தார்.

இதற்கிடையே, வடிவேலுவை பலரும் சூழ்ந்துக்கொண்டு போட்டோ மற்றும் வீடியோ எடுத்ததால் அங்கு கூட்டம் ஏற்பட்டது. இதனால் அங்கு ஒரு வித குழப்பமான சூழல் நிலவியது. அப்போது அங்கிருந்த ஒருவர், “ஓப்பனா சொல்கிறேன்.. நீங்க ரொம்ப தொந்தரவு செய்கிறீர்கள்.. எதுவாக இருந்தாலும் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே சென்று செய்யலாமே.. உங்களால் அதிகாரிகளுக்கும் தொந்தரவு தான்.. வெளியே சென்றால் பிரச்சனை இல்லாமல் பேட்டி கொடுக்கலாமே” என்று கடுகடுத்தார்.

திடீரென அந்த நபர் இப்படி டென்ஷனாக மாற அங்கிருந்தவர்கள் முகம் சட்டென மாறியது. சட்டென வடிவேலு முகமும் மாறிய நிலையில், அதன் பிறகு நொடிகளில் சுதாகரித்துக் கொண்டார். அந்த நபரிடம், “சரியாக சொன்னீர்கள்.. சொன்ன கேட்க மாட்டீங்களா.. அண்ண சொல்றாருல்ல.. வெளியே வாங்க பார்த்துக்கலாம்” என்று கலாய்த்தபடியே அங்கிருந்து கிளம்பினார் வடிவேலு.

Read More : வாக்களித்துவிட்டு வந்ததும் பரபரப்பு அறிக்கையை வெளியிட்ட நடிகர் விஜய்..!!

Chella

Next Post

அவசியமற்ற துபாய் பயணத்தை தவிர்கவும்! - இந்திய தூதரகம் அறிவுறுத்தல்

Fri Apr 19 , 2024
ஐக்கிய அரசு அமீரகத்தில் கனமழை பெய்து வருவதால், அவசியற்ற துபாய் பயணத்தை மாற்றி அமைத்துக்கொள்ளுமாறு இந்தியப் பயணிகளை இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம், இந்திய பயணிகளுக்கு புதிய பயண எச்சரிக்கையை விடுத்துள்ளது. அதில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் எதிர்பாராத விதமாக பெய்த கன மழை காரணமாக […]

You May Like