கோவை மாவட்ட பகுதியில் உள்ள ஈஷா யோகா மையத்திற்கு வந்து செல்கின்ற நிலையில், அதனை தொடர்ந்து பல மர்ம மரணங்களும் நிகழ்வதும் அரங்கேறி வருகிறது.
கோவை அருகே அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு யோகா பயிற்சிக்கு சென்ற பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஈஷா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் எனபவர் மீதும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, கோவை ஈஷா யோகா மையத்தில் தொடரும் மர்ம மரணங்கள் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.