தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் அதிகரிக்கும் கொரோனா.. இதை எல்லாம் ஃபாலோ பண்ணுங்க.. மத்திய அரசு அறிவுரை..

கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், 5 அம்ச தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. 

corona

இந்த நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.. இதற்கு ஒமிக்ரானின் XBB.1.16 என்ற துணை மாறுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று 6 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மகாராஷ்டிரா, குஜராத், தெலங்கானா, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலர் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் ” கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான போராட்டத்தில் இதுவரை அடைந்த வெற்றிகளை இழக்காமல், தொற்றுநோயைத் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஆபத்து மதிப்பீடு அடிப்படையிலான அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உள்ளது. அரசு கடுமையான கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவைப்பட்டால் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதும் அவசியம்.

கொரோனாவை நுண்ணிய அளவில் (மாவட்டம் மற்றும் துணை மாவட்டங்கள்) ஆராய்ந்து, விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளைச் செயல்படுத்துவதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.. இதன் மூலம் வழங்கப்படும் பல்வேறு ஆலோசனைகளை திறம்பட கடைப்பிடிப்பதை உறுதிசெய்துகொள்வதில் மாநிலங்கள் கவனம் செலுத்த வேண்டும்.. குறிப்பாக கொரோனா பரிசோதனை, தொடர்பை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி உள்ளிட்ட 5 அம்ச நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்..” என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது..

1newsnationuser1

Next Post

அசத்தும் மத்திய அரசு...! மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கை...! இதெல்லாம் உறுதி செய்யப்படும்...!

Fri Mar 17 , 2023
மூத்த குடிமக்களுக்கான தேசிய கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. மூத்த குடிமக்களின் நலனை உறுதி செய்வதற்காக 1999-ம் ஆண்டு மூத்த குடிமக்களுக்கான தேசியக் கொள்கை அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கான நிதி மற்றும் உணவுப் பாதுகாப்பு, உடல்நலன், இருப்பிடம், இதர தேவைகள், தாக்குதல் மற்றும் சுரண்டலுக்கு எதிரான பாதுகாப்பு, அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான சேவைகள் ஆகியவை இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளை ஒப்பிடுகையில் வயதானவர்களை பராமரிப்பதில் இந்தியாவில் உள்ள குடும்பங்கள் இன்றும் […]

You May Like