முக்கிய அறிவிப்பு…! அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஜுன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு…!

college admission 2025

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு தொடங்கியது.


தமிழகத்தில் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த (2025-26) கல்வி ஆண்டில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மே 7-ம் தேதி தொடங்கி 27-ம் தேதி முடிவடைந்தது. 2.25 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். அதில், 1.85 லட்சம் பேர் விண்ணப்ப கட்டணமும் செலுத்தி, ஆன்லைன் பதிவை முழுமை முடித்துள்ளனர்.

இதையடுத்து, முன்னாள் ராணுவத்தினரின் பிள்ளைகள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் ஆகிய சிறப்பு பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 29-ம் தேதியும், பொது பிரிவினருக்கான தரவரிசை பட்டியல் மே 30-ம் தேதியும் கல்லூரி கல்வி இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டன. விரும்பிய பாடப் பிரிவை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு சிறப்பு பிரிவினருக்கு ஜூன் 2, 3-ம் தேதிகளிலும், பொது பிரிவினருக்கு ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும் என கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

Read More: ஆதவ் அர்ஜுனா விவகாரம்.. நடிகர் விஜய் என்னிடம் போனில் பேசவில்லை..! முற்றுப்புள்ளி வைத்த எடப்பாடி…!

Vignesh

Next Post

அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கா..? தவிர்க்க என்ன செய்ய வேண்டும்..? வாங்க பார்க்கலாம்..

Tue Jun 3 , 2025
இரவு உணவுக்குப் பிறகு அல்லது மதிய உணவுக்குப் பிறகும் உங்களுக்குப் பசிக்கிறதா? குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து இனிப்புகள் அல்லது சிற்றுண்டிகளைத் தேடுகிறீர்களா? நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பார்த்துக் கொண்டே சாப்பிடுகிறீர்களா? அதிகமாக சாப்பிடுவது பெரும்பாலும் நீங்கள் விரும்புவதை அல்லது நீங்கள் பார்ப்பதை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இந்த நேரத்தில் நாம் பொரித்த உணவுகள், சிப்ஸ், சாக்லேட்டுகள் அல்லது துரித உணவுகளை சாப்பிடுகிறோம், அவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது வயிற்றுப் பிரச்சினைகள், […]
overeating

You May Like