திருநெல்வேலி மாவட்ட பகுதியில் உள்ள மேலசெவலத்தில் பிரேம்குமார் வசித்து வந்தார். இவரது மனைவி நாகர்கோவில் பள்ளிவிளை அம்மன் கோவிலில் உள்ள வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில், பிரேம்குமாரை அவரது மகன் தர்மராஜ் கவனித்து வந்துள்ளார். மேலும் உடல்நிலை சரியில்லாத தந்தையை தர்மராஜ் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முதியவர் முதுமையால் அவதிப்பட்டு வரும் தன்னை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை நான் எதற்கு இருக்கிறேன், சாவதே நல்லது என்று தனது மகனிடம் கதறி அழுதார். அதற்கு மகனும் தந்தையை சமாதானம் செய்துள்ளார்.
பிரேம்குமார் வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம் பக்கத்தினர் தர்மராஜுக்கு தகவல் தெரிவித்தனர். உடனே தந்தை வீட்டிற்கு வந்தபோது தந்தை தூக்கில் அழுகிய நிலையில் தொங்கியபடி தனது தந்தையை பார்த்து கதறி அழுதார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிரேம்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.