திருப்பூர் மாவட்ட பகுதியில் வெங்கமேடில் சுப்பிரமணி (72) எனபவர் தனது மனைவி பார்வதி (65) மற்றும் ஒரு மகள், மகனுடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலிலேயே தங்கி பூசாரியாக பணியாற்றி வந்துள்ளார்.
இந்த நிலையில், இன்று காலை மகள் சுப்பிரமணி தங்கியிருந்த அறைக்கு உணவு கொடுக்க வந்துள்ளார். அப்போது, அறை முழுவதும் ரத்தமாக இருந்ததை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை தொடர்ந்து, கோவிலின் பின்புறம் சென்று பார்த்துள்ள போது, அங்கு சுப்பிரமணி எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
இதனையடுத்து இது குறித்து காவல்துறையினர் தகவல் அளித்ததன் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சுப்பிரமணியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சேர்த்துள்ளனர். மேலும் இது பற்றி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.