தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் கும்மனூர் அடுத்துள்ள சூடனூர் கிராமத்தைச் சேர்ந்த முனிராஜ் என்பவரின் மகன் நவீன்(30) கட்டிடம் மேஸ்திரி ஆன இவர் தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை கட்டுப்படுத்தும் நோக்கத்தில், சட்ட விரோதமாக மின்வேலியை அமைத்திருக்கிறார். இந்த நிலையில், இன்று அதிகாலை மையல் பகுதிக்கு சென்ற நதியின் எதிர்பாராத விதமாக மின்வெளியில் சிக்கியதாக கூறப்படுகிறது.
இதில் உடலில் மின்சாரம் பாய்ந்து அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து பஞ்சப்பள்ளி காவல்துறையினர் உயிரிழந்த நவீனின் உடலை மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். சென்ற மாதம் மாரண்டஅள்ளி அருகே இப்படி அமைக்கப்பட்டிருந்த சட்ட விரோத மின்வேலியில் சிக்கி 3 யானைகள் உயிரிழந்துள்ளனர்.
அதன் பிறகு சட்ட விரோத மின்வேலி அமைப்பது குறிப்பு வனத்துறை, மின்வாரியம் மற்றும் காவல்துறை உள்ளிட்டவர்கள் இணைந்து பணத்தை ஒட்டிய கிராம பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அதேபோல விளை நிலங்களில் திடீர் ஆய்வுகளையும் நடத்தி வருகின்றன.
இருந்தாலும் விலங்குகள் விளைநிலங்களில் நுழைவதை தடுக்கும் பொருட்டு, விவசாயிகள் சிலர் விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல் தற்போது விளைநிலங்களை சுற்றி இரவின் சட்ட விரோதமாக மின் வேலிகளை அமைத்து வருகின்றனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணும் விதத்தில், அதிகாரிகள் சரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.