ஊட்டி அருகே ஓடும் பேருந்தில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவரரமாரியாக தாக்கிய முன்னாள் ராணுவ அதிகாரியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள கொலக்கொம்பை என்ற கிராமத்தில் காவலராக பணியாற்றி வந்திருக்கிறார் அந்த பெண் போலீஸ். பணி நிமித்தமாக கோயமுத்தூர் சென்ற இவர் வேலையை முடித்துவிட்டு கோயம்புத்தூரிலிருந்து மேட்டுப்பாளையத்திற்கு பஸ்ஸில் வந்துள்ளார். பின்னர் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் பேருந்து ஏறும்போது இரவு நேரம் ஆகிவிட்டது. அப்போது இவரது இருக்கைக்கு பின் இருக்கையில் இருந்த ஒரு நபர் பெண் போலீசுக்கு தொடர்ந்து பாலியல் சீண்டல் கொடுத்து வந்திருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் எழுந்து நின்று இவரை திட்டியுள்ளார். இதனால் அதிரமடைந்த அந்த நபர் பெண் போலீசை தாக்கியுள்ளார். இதனைப் பார்த்த பேருந்தில் இருந்த மற்ற நபர்களும் பெண் போலீஸ் க்கு ஆதரவாக அந்த நபரை தட்டி கேட்டுள்ளனர். இதனால் கோபம் அடைந்த அந்த நபர் எனக்கு எல்லா உயர் அதிகாரிகளையும் தெரியும் என்னை ஒன்றும் செய்ய முடியாது என்று கூறி அமர்ந்திருக்கிறார்.
பேருந்தில் உள்ள அனைவரும் தனக்கு எதிராக திரும்புவதை அறிந்து அந்த நபர் காட்டேரி என்ற இடத்தில் இறங்கி விட்டார். அவரைப் பின் தொடர்ந்த பெண் போலீசும் பேருந்திலிருந்து இறங்கி இருக்கிறார். அந்த நபர் வேறு ஒரு பேருந்தில் ஏற அதே பேருந்தில் அவரை பின்தொடர்ந்து பெண் காவலரும் ஏறினார். பின்னர் அந்த டிரைவரிடம் சென்ற பெண் காவலர் பஸ் லெவல் கிராஸ்ங்கில் நிறுத்துமாறு கூறினார். அதற்குள் மற்ற காவல் துறை அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்து விட்டார். அனைவரும் லெவல் கிராஸ்ங்கில் தயாராக இருந்து பேருந்து வந்ததும் அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அந்த நபரின் பெயர் தர்மன் என்பதும் அவரது வயது 56 முன்னாள் ராணுவ அதிகாரி என்பதும் தெரிய வந்திருக்கிறது. அவர் கோத்தகிரி அருகே உள்ள அஜ்ஜூர் என்ற பகுதியில் வசித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து அவர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்