கேவலமான அரசியலை திசைதிருப்பவே விவசாய கடன் தள்ளுபடி.. விஞ்ஞான ஏமாற்று வேலை.. விஜய் அரசை சாடிய இபிஎஸ்..!

vijay eps

கூட்டுறவு வங்கிகளில் இருந்து ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் விஜய் அதிரடியாக அறிவித்துள்ளார்.. இந்த கடன் தள்ளுபடி மே 1, 2025 முதல் 28 பிப்ரவரி 2026 வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது..


அதன்படி கடன் தொகை ரூ.50,000 வரை இருந்தால், குறு விவசாயிகளுக்கு முழு 100% தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.50,0001 முதல் ரூ.60,000 வரை கடன் இருந்தால் ரூ.40,000 தள்ளுபடி செய்யப்படும். ரூ.60,001 முதல் ரூ.70,000 வரை கடன் இருந்தால் ரூ.30 வரை தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.70,001 முதல் ரூ.80,000 வரை கடன் பெற்று இருந்தால் ரூ.20,000 வரை தள்ளுபடி செய்யப்படும்..

ரூ.80,001 முதல் ரூ.90,000 வரை கடன் இருந்தால் ரூ.10,000 வரை தள்ளுபடி செய்யப்படும்.. ரூ.90,001 முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்றிருந்தால் ரூ.5000 தள்ளுபடி செய்யப்படும்.. என்று முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்..

இந்த நிலையில் தவெக அரசின் கடன் தள்ளுபடி ஒரு ஏமாற்று வேலை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.. இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர் “ எங்க வீட்டுக்காரரும் கச்சேரிக்கு போனாராம்” என்ற கதையாக ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் பொய்க்கால் குதிரை அரசு, விவசாயப் பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விஞ்ஞான ஏமாற்று வேலையை அரங்கேற்றியுள்ளது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை தடுக்க வக்கில்லாமல் விழி பிதுங்கி நின்று, அரசு செய்ய வேண்டிய வேலைகளைப் பார்க்காமல் அற்பத்தனமாக குதிரை பேரம் எனும் மிகக் கேவலமான அரசியலை அரங்கேற்றிக் கொண்டிருப்பதை தமிழக மக்கள் முகம் சுளித்து அருவருப்பாக பார்த்துக் கொண்டிருப்பதை திசைதிருப்ப, இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சரி, அதையாவது ஒழுங்காக செய்தார்களா என்றால், இல்லை!

எனது தலைமையிலான அதிமுக அரசு 2021-ம் ஆண்டு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய ரூ. 12,110 கோடி ரூபாயை தள்ளுபடி செய்து, 16.43 லட்சம் விவசாயிகளின் கண்ணீரைத் துடைத்தது. அது தான் ஒரு அரசாங்கம் விவசாயிகள் உணர்வுகள் அறிந்து மேற்கொள்ளும் செயல்.

ஆனால் இன்றைய அரசு செய்துள்ளது என்ன? தேர்தல் அறிக்கையில் “5 ஏக்கருக்குக் குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கியுள்ள பயிர்க்கடன்கள் முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யப்படும்” என்று அறிவித்து விட்டு, இப்போது நிலத்தை அளவுகோலாக எடுக்காமல், பணத்தை அளவுகோலாக வைத்து மிகப்பெரிய ஏமாற்று வேலையில் ஈடுபட்டு உள்ளனர்.

2021-ல் நாம் 12,110 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்ததையும், இவர்கள் இப்போது 2026-ல் வெறும் 2,044 கோடி ரூபாய் கடனை மட்டுமே தள்ளுபடி செய்வதாக கூறுவதையும் பார்த்தாலே விவசாயிகளுக்கு புரிந்துவிடும், இது எவ்வளவு பெரிய தில்லுமுல்லு என்று!

மண்ணில் கால் வைத்து, ஏர் பிடித்து உழுத விவசாயி என்ற முறையில் சொல்கிறேன்- விவசாயிகளை ஏமாற்றும் எந்த ஒரு அரசும் நிலைத்ததாக சரித்திரமே இல்லை! சோறு போடும் விவசாயி கடவுளுக்கு நிகரானவன்! அந்த பச்சைத் துண்டு அணிந்த உழவர்களை ஏமாற்றாதீர்கள்; செய்வன திருந்தச் செய்யுங்கள்..” என்று குறிப்பிட்டுள்ளார்..

Read More : CNG Price Hike : அடுத்த ஷாக்..! CNG விலை மீண்டும் உயர்வு..! 12 நாட்களில் இது 4-வது முறை..!

English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has criticized the DMK government’s loan waiver as a sham.

RUPA

Next Post

Flash : குட்நியூஸ்.. இன்று மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

Tue May 26 , 2026
In Chennai today, the price of gold has dropped by Rs. 400 per sovereign and is being sold at Rs. 1,17,840.
gold jewlery

You May Like