#திண்டுக்கல் :தோட்டத்து வீட்டில் விவசாயி மர்ம மரணம்..!

திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார். 


எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய பின்பும் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தோட்டத்து வீட்டிற்கு சென்று நேரில் பார்த்துள்ளனர். 

அங்கே ஜோதி கழுத்து பகுதியில் வெட்டு பட்டு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்தும் வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

’உடல் ரீதியாக பல தொல்லைகள்’..!! ’இந்த நடிகரால்தான் சினிமாவை விட்டு விலகினேன்’..!! ரஞ்சிதாவின் ரகசியம்..!!

Wed Nov 30 , 2022
பிரபல நடிகர் ஒருவர் தன்னிடம் உடல் ரீதியாக பல தொல்லைகளை கொடுத்ததால் தான் சினிமாவை விட்டு விலகியதாக நடிகை ரஞ்சிதா தெரிவித்துள்ளார். சினிமாவை பொருத்தவரை ஒரு நடிகை நடித்து வந்தால் அவருக்கு ஒரு சில திரைப்படங்கள் ஹிட் அடித்தாலும் தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைப்பதில்லை. அதிலும் ஒரு சில நடிகைகளுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்பு கிடைத்தாலும் அவர்கள் முன்னணி நடிகைக்கான அந்தஸ்தை அடைவது மிகவும் கடினம். இதெல்லாம் கடந்து வந்தால் […]
Ranjitha

You May Like