திண்டுக்கல் மாவட்ட பகுதியில் உள்ள காசம்பட்டி கிராமத்தில் கணேசன் என்பவர் விவசாயம் செய்யும் தனது மகன் ஜோதி (27)யுடன் வசித்து வருகிறார். மகன் இரவு நேரங்களில் தனது கிராமத்தில் இருக்கும் தோட்டத்து வீட்டிற்கு சென்று தங்கி வந்துள்ளார்.
எப்போதும் போல் நேற்று இரவும் ஜோதி தோட்டத்து வீட்டுக்கு சென்ற நிலையில், காலை வெகு நேரம் ஆகிய பின்பும் வீடு திரும்ப வில்லை. இதனால் சந்தேகமடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் சேர்ந்து தோட்டத்து வீட்டிற்கு சென்று நேரில் பார்த்துள்ளனர்.
அங்கே ஜோதி கழுத்து பகுதியில் வெட்டு பட்டு பலத்த காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பரிதாபமாக உயிரிழந்த நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், இது பற்றி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.
புகாரின் பேரில், காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்தும் வருகின்றனர்.