நடிகர் தனுஷின் 50வது திரைப்பட ‘First look Poster’ வெளியீடு.! ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு.!

நடிகர் தனுஷின் 50வது திரைப்படம் வெளியாக உள்ளது. ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளார். ஏ.ஆர் ரகுமான் இசையில், தனுஷ் இந்த படத்தின் கதையை எழுதி, இயக்கவிருக்கிறார். தற்போது ராயன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில், நடிகர் தனுஷ், எஸ்.ஜே சூர்யா, நித்யா மேனன், காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

தனது பான்-இந்தியா மட்டும் மற்றும் பாலிவுட் படங்களின் மூலம் நாடு முழுவதும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றிருக்கிறார் தனுஷ். 2024 இறுதிக்குள், தனுஷின் 50வது திரைப்படம் வெளியாக இருக்கிறது. தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்திற்கு D50 என்று தற்காலிக தலைப்பிட்டு, கடந்த ஜனவரி 2023 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்பொழுது ‘ராயன்’ என்று இந்த படத்திற்கு பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னையில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், தனுஷின் இயக்கத்தில் வெளிவரும் மூன்றாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தை ‘சன் பிக்சர்ஸ்’ கலாநிதி மாறன் தயாரித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் மிரட்டலான இசையில். இசையில் இந்த படம் வெளிவர உள்ளது. ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்த படத்திலும் தனுஷ் தக்க வைத்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

நடிகர் தனுஷ், நித்யா மேனன், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், அனிகா சுரேந்திரன், சுந்தீப் கிஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, சென்னையில் உள்ள ஆதித்யா ராம் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமான செட் போட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் (First look poster) இன்று 6 மணி அளவில் வெளியானது. அது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது.

English summary: Actor Dhanush’s 50th movie first look poster has been released. The movie has been named as ‘Raayan’.

Read More: ‘எந்திரன்’ பட பாணியில் காதலன்.! AI காதலனை விரும்பும் சீனப் பெண்கள்.! | Latest Tamil News – 1NewsNation

Next Post

மாசம் ரூ,1,000/- முதலீடு போதும்.! முதிர்வு காலத்தில் ரூ.5,70,205/- கைகளில்.! அசத்தலான செல்வமகள் சேமிப்பு திட்டம்.!

Mon Feb 19 , 2024
மத்திய அரசு பெண் குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு வகையான சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது . அந்தத் திட்டத்தில் முக்கியமான ஒன்று சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டமாகும். இந்தத் திட்டம் 2015 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது. இது செல்வமகள் சிறு சேமிப்பு திட்டம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்தத் திட்டத்திற்கு அரசு வரி விலக்கும் அளித்திருக்கிறது. மேலும் இந்தத் திட்டத்தில் சேமிக்கப்படும் பணத்திற்கு அதிக வட்டியும் வழங்குகிறது. […]

You May Like