தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருந்த செல்வப்பெருந்தகையை மாற்றி, புதிய தலைவரை காங்கிரஸ் அறிவித்துள்ளது. அதன்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த நியமன அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். மாற்றப்பட்ட செல்வப்பெருந்தகையின் பங்களிப்பை காங்கிரஸ் கட்சி பாராட்டுவதாகவும் வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மக்களவை தொகுதியின் உறுப்பினராக மாணிக்கம் தாகூர் இருக்கிறார்.. இவர், கூட்டணி கணக்கு, தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி என அனைத்திலும் முக்கிய பங்கு வகித்தவர். பதவியில் தொடர விரும்பவில்லை என காங்கிரஸ் தலைமையிடம் செல்வப்பெருந்தகை வலிய்றுத்திய நிலையில் புதிய தலைவராக மாணிக்கம் தாகூர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பே ஆட்சியில் பங்கு என்றும், காங்கிரஸ் தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் கூறி வந்தார்.. மேலும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, தவெக உடன் கூட்டணி அமைத்து அமைச்சரவையிலும் இடம்பிடித்துள்ளது.. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றது முதலே திமுக தோல்வியையும், அக்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது மாணிக்கம் தாக்கூர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : திமுகவை விட்டு விலகிவிட்டோம்.. இனி தவெகவுக்கு தான் எங்கள் ஆதரவு.. வைகோ பரபரப்பு பேட்டி..!



