எது நாகரிகம்…? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா..? அண்ணாமலை காட்டம்

annamalai manothangaraj 2025

கோவில் திருவிழாவுக்கு அதிகளவில் கூட்டம் செல்வதும் உண்மையிலேயே நாகரீகமான சமூகத்திற்கு ஒரு நல்ல அடையாளமாக என்னால் பார்க்க முடியாது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார். மேலும் பொது இடங்களில் கூடும் போது, பொதுமக்கள் நம்முடைய அறிவினை பயன்படுத்தி முண்டியடித்து செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறினார். அமைச்சர் மனோ தங்கராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில்; கர்நாடக மாநிலம் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில், காங்கிரஸ் அரசின் நிர்வாகத் தோல்வியால், கூட்ட நெரிசலில் சிக்கி, பலர் உயிரிழந்தது குறித்த கேள்விக்கு, பொதுமக்கள் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று பதிலளித்திருக்கிறார் அமைச்சர் மனோ தங்கராஜ். கோவில் சொத்துக்களையும், பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உண்டியல் பணத்தையும், சுரண்டிக் கொண்டிருக்கும் கூட்டம், இன்று பொதுமக்கள் கோவில் திருவிழாக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறும் அளவுக்கு கொழுத்துப் போயிருக்கிறது.

எது நாகரிகம்? தமிழகத்தின் ஒட்டு மொத்த கனிம வளங்களையும் கடத்தி விற்பதா அல்லது ஆவின் பால் கொழுப்பைக் கூட விட்டு வைக்காமல் திருடுவதா? இந்தி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க, பொதுமக்கள் கூட்டமாகக் கோவில் திருவிழாக்களுக்கு செல்லக் கூடாது என்று கூறும் அமைச்சர் மனோ தங்கராஜ், கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் தனது கட்சித் தலைவரிடம் இப்படிச் சொல்வாரா?

தமிழகத்தில் கள்ளச் சாராயமும், கஞ்சாவும், போதைப் பொருள்களும் ஆறாக ஓடிக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை என்ற அளவில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. இந்த அழகில், பகுத்தறிவு பேசுகிறாராம். வெங்காயம் என தெரிவித்துள்ளார்.

Read More: சங்காதரேசுவரர் கோயில் தேரோட்டம்: புரசைவாக்கம் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை..!!

Vignesh

Next Post

ஒரே பாலின திருமணம் சட்டப்பூர்வமானது அல்ல; ஆனாலும் LGBTQ+ தம்பதிகள் குடும்பங்களை உருவாக்கலாம்!. சென்னை உயர்நீதிமன்றம்!.

Fri Jun 6 , 2025
இந்தியாவில் ஒரே பாலின திருமணம் சட்டபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், வாழும் உரிமை, குடும்ப வாழ்வு, குழந்தைகளை வளர்ப்பதற்கான உரிமைகள் LGBTQ+ தம்பதிகளுக்கு உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. LGBTQIA+ தம்பதிகள் திருமணம் செய்து கொள்வதற்கான அடிப்படை உரிமையை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்ததை நீதிபதிகள் GR சுவாமிநியாதன் மற்றும் V லட்சுமிநாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு ஒப்புக்கொண்டது. இருப்பினும், திருமணம் என்பது ஒரு குடும்பத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி […]
chennai high court 11zon

You May Like