முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16-வது பெனடிக் வயது முதிர்வு காரணமாக பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்பு அவர் வாட்டிகனில் உள்ள குருமார்களின் மடத்தில் தங்கி ஓய்வு எடுத்து வந்தார். இந்த நிலையில் 95 வயதாகும் 16-வது பெனடிக்கிற்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதற்காக வாடிகனில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக வாடிகன் தெரிவித்திருந்த நிலையில், போப்பாண்டவர் 16ம் பெனடிக்ட் இன்று காலை 9:34 மணிக்கு வாட்டிகனில் உள்ள மேட்டர் எக்லேசியா மடாலயத்தில் சிகிச்சைப் பலனின்றி காலமானார் .
யார் இந்த 16-ம் பெனடிக்ட்? : 16-ம் பெனடிக்ட் இவரது இயற்பெயர் ஜோசப் ரட்சிங்கர். கடந்த 1977 முதல் 1982 வரை ஜெர்மனியின் முனிச் உயர் மறைமாவட்ட பேராயராக பதவியில் இருந்தார். கடந்த 2005ம் ஆண்டு முதல் 2013 வரை போப் ஆண்டவராக இருந்த இவர் கடந்த 2013-ம் ஆண்டு வயது முதிர்வு காரணமாக போப் ஆண்டவர் பதவியில் இருந்து விலகினார். கடந்த 1415-ம் ஆண்டுக்கு பிறகு போப் ஆண்டவர் பதவியில் இருந்து தாமாக பதவி விலகியவர் 16-வது பெனடிக் என்பது குறிப்பிடத்தக்கது.