சிவகங்கை அருகே தெப்பக்குளம் கரையில் உணவகம் நடத்தி வருபவர் விவேகானந்தன்(45) இவருடைய ஹோட்டலுக்கு நேற்று முன்தினம் இரவு வருகை புரிந்த இருவர் 400 ரூபாய்க்கு அசைவ உணவுகளை பார்சல் வாங்கி இருக்கிறார்கள். அவர்களிடம் விவேகானந்தன் அவர்கள் வழங்கிய உணவுக்கான பணத்தை கேட்டிருக்கிறார். ஆனால் அந்த இருவரும் பணம் தர மறுத்ததுடன், விவேகானந்தனை கத்தியை காட்டி மிரட்டியதாக கூறப்படுகிறது.
விவேகானந்தனை மிரட்டியது மட்டுமல்லாமல் அவரை கடுமையான முறையில் தாக்கிவிட்டு உணவு பொருட்களையும் சிதறவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள் இதன் காரணமாக, அதிர்ச்சி உறைந்தனர். இது தொடர்பாக விவேகானந்தன் வழங்கிய புகாரின் அடிப்படையில், சிவகங்கை நகர காவல்துறையினர் உணவகத்தில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, விவேகானந்தன் மீது தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக விசாரித்து வருகிறார்கள்.
இதற்கு நடுவே உணவாக உரிமையாளரை உணவு வாங்க வந்தவர்கள் தாக்கும் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.