கோவையில் ராட்சத விளம்பர பலகை சரிந்து விழுந்து 3 இளைஞர்கள் பரிதாப பலி!!

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் சாலையோரத்தில் ராட்சத விளம்பர பலகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று அந்த விளம்பர பலகை திடீரென சரிந்து விழுந்தது. இதில் சிக்கி 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்கள் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். விளம்பர பலகை கட்டும் பணியின் போது, அந்த விளம்பர பலகை சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. 


விளம்பர பலகை சரிந்து விழுந்ததில் 3 இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களின் விபரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதுகாப்பற்ற முறையில் ராட்சத விளம்பர பலகைகள் வைப்பதை தடுத்து நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

சாப்பிட்ட உடனே மீண்டும் பசிக்கிறதா?... எச்சரிக்கை!... இந்த நோய் தாக்கும் அறிகுறியாக இருக்கலாம்!

Fri Jun 2 , 2023
வயிறு நிறைய சாப்பிட்டவுடன் அப்போதே அல்லது சிறிது நேரத்துக்குள்ளாகவே பசிக்கும் உணர்வு ஏற்படுவதுண்டு. இதற்கு பொதுவான காரணம் குடல் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் என்பவை உடலிலிருந்து அவற்றுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொண்டு செழித்து வாழக்கூடியவை. செரிமான பகுதியான குடல் சுவர்களில் தங்கி மனிதர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை இவை. இதனால் பசியுணர்வையும் தாண்டி பிற அறிகுறிகளும் தென்படும். பல்வேறு வகையான புழுக்கள் குடல் ஒட்டுண்ணிகளாக உருவாகின்றன. அந்தவகையில், கழிவறையை பயன்படுத்திய பிறகு கைகளை […]
intestine cleaning

You May Like