மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு ஈடாக, அங்குள்ள அமெரிக்க கடற்படை முற்றுகையைத் தளர்த்துவது குறித்து அமெரிக்காவும் ஈரானும் ஒரு உடன்பாட்டிற்கு வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க-ஈரான் மோதலின் தொடக்கத்தில் ஹார்முஸ் ஜலசந்தியை மறிக்க ஈரான் எடுத்த முடிவைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட பதற்றங்களால் உலகளாவிய எரிசக்தி விநியோகம் பாதிக்கப்பட்ட நிலையில், வியாழக்கிழமை இந்த உடன்பாடு எட்டப்பட்டது.
“ஹார்முஸ் ஜலசந்தியை படிப்படியாக மீண்டும் திறப்பதற்கு ஈடாக, முற்றுகையைத் தளர்த்துவது தொடர்பாக உடன்பாடுகள் எட்டப்பட்டுள்ளன. வரும் மணிநேரங்களில் ஜலசந்தியில் சிக்கியுள்ள கப்பல்கள் விடுவிக்கப்படும்,” என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்..



