தமிழ்நாடு முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் ஜோசப் விஜய் முதன்முறையாக டெல்லி பயணம் செய்துள்ளார்.. இன்று மாலை 4.30 மணியளவில் பிரதமர் மோடியை விஜய் சந்தித்தார்.. டெல்லியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சேவா தீர்த் அலுவலகத்தில் பிரதமர் மோடி – விஜய் சந்திப்பு நடைபெற்றது.. முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் பிரதமர் மோடி உடன் நடைபெற இருக்கும் முதல் சந்திப்பு இதுவாகும்.. அப்போது தேர்தலில் பெற்ற வெற்றிக்காக முதல்வர் விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்..
இந்த நிலையில், முதல்வர் ஜோசப் விஜய் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசியது குறித்து தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் “ பிரதமர் மோடியிடம் முக்கிய பிரச்சனைகள் குறித்து கோரிக்கை மனுவை முதல்வர் விஜய் வழங்கினார்.. அரசு நிகழ்ச்சிகளில் தொடக்கத்திலேயே தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடுவதற்கு உள்துறை அமைச்சகம் தெளிவுரை வழங்க வழங்க வேண்டும் என்று முதல்வர் விஜய் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்..
மேகதாது அணை குறித்த கர்நாடக துணை முதல்வரின் பேச்சால் தமிழக விவசாயிகள் கவலையில் உள்ளனர்.. இணை ஆற்றுப்படுகை மாநிலங்களில் ஒப்புதல் இல்லாமல் மேகதாது அணை திட்டத்தை அனுமதிக்கக் கூடாது.. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மாநில ஒப்புதல் இன்றி மேகதாது திட்டத்தை அனுமதிக்கக் கூடாது என்று பிரதமரிடம் முதல்வர் வலியுறுத்தினார்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள மீன்வர்களை உடனடியாக விடுவிக்க இலங்கை அரசை, இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் பிரதமரை முதல்வர் கேட்டுக்கொண்டார்..
வான்வழி அமைப்பு மையத்தை தமிழ்நாட்டில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முதல்வர் பிரதமரிடம் கோரிக்கை வைத்தார்.. இந்த சந்திப்பின் போது, பிரதமர் தனது நெதர்லாந்து நாட்டு பயணத்தின் போது ஆனைமங்கள செப்பேடுகளை மீட்டு இந்தியாவுக்கு கொண்டு வந்தமைக்கு முதல்வர் விஜய் நன்றி தெரிவித்தார்…” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
Read More : PF கணக்கு வைத்துள்ள ஊழியர்களுக்கு ஓர் எச்சரிக்கை! இந்த சிறிய வேலையை செய்யவில்லை எனில் பெரும் சிக்கல்..!



