மாணவிகளுக்கு பாலியல் தொல்லை….! ஆசிரியர் உட்பட 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது……!

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்களை தடுப்பதற்கு மாநில அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.


என்னதான் தவறு செய்பவர்களை அரசாங்கம் தண்டித்தாலும் சமூகத்தில் சுய ஒழுக்கம் என்பது இல்லாத வரையில் இது போன்ற தவறுகள் ஒருபோதும் குறையாது என்பதில் எந்தவித ஐயமும் கிடையாது.

அந்த வகையில், கிருஷ்ணகிரி அருகே எலத்தகிரி பகுதியில் இருக்கின்ற அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் எல்லோருக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் ராஜா (59) ஆய்வக உதவியாளர் நடேசன் (59) உள்ளிட்ட இருவரும் 2️ மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக புகார் எழுந்தது.

இது குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் சிவகாந்தி தலைமையிலான குழுவினர் விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் இவர்கள் மீது வழங்கப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டது அதோடு இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக நன்னடத்தை அலுவலர் ரகுராம் பர்கூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார்.

இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு, ஆசிரியர் ராஜா மற்றும் ஆய்வக உதவியாளர் நடேசன் உள்ளிட்டோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். அதோடு தலைமறைவான இருவரையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகிறார்கள். இதற்கு நடுவே இருவரையும் பணியிடை நீக்கம் செய்து கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Next Post

கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு.. காணாமல் போன தமிழக மீனவர் உடல் சடலமாக மீட்பு..

Fri Feb 17 , 2023
தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை துப்பாக்கி சூடு நடத்திய நிலையில், காணாமல் போன மீனவரின் உடல் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.. தமிழக – கர்நாடக எல்லையில் அமைந்துள்ள பாலாறு வனப்பகுதியில், பாலாறும் – காவிரியும் கலக்கும் இடத்தில் தமிழக மீனவர்கள், பரிசலில் சென்று மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்த சூழலில் கடந்த செவ்வாய்க்கிழமை பரிசல்களில் சென்ற மீனவர்கள், பாலாற்றில் மீன் பிடித்துள்ளனர்.. அப்போது அங்கு வந்த கர்நாடக […]
1070294 river

You May Like