சமீப காலமாக தமிழகத்தில் கள்ளக்காதல் தொடர்பாக கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அந்த விதத்தில், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெல்வாய் பாளையத்தை சேர்ந்தவர் விவேக். இவருடைய மனைவி ஜெகதீஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன.
இத்தகைய சூழ்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த ஏகாம்பரம் என்ற நபருடன் ஜெகதீஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் ஆட்கள் செல்ல செல்ல இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மலர்ந்துள்ளது. ஆகவே கள்ளக்காதலர்கள் இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் ஜெகதீஸ்வரி கணவர் விவேக்குக்கு தெரியவந்தது. ஆகவே மனைவியை அவர் கண்டித்து இருக்கிறார்.
இப்படியான சூழ்நிலையில்தான் நேற்று காலை விவேக் திடீர் என்று தன்னுடைய வீட்டில் பேச்சு மூச்சு இல்லாமல் உயிரிழந்து கிடப்பதாக அவருடைய மனைவி ஜெகதீஸ்வரி அலறி அழுது கூச்சலிட்டுள்ளார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சென்று பார்த்த போது விவேக் பிணமாக கிடந்துள்ளார். இதற்கு நடுவே விவேக்கின் பெற்றோர் தன்னுடைய மகனின் சாவில் சந்தேகம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் வழங்கியிருக்கிறார்கள்.
அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வரைந்து வந்த காவல்துறையினர் விவேக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள். அதோடு அவருடைய மனைவியிடம் காவல்துறையினர் விசாரணையை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்திருக்கிறார்.
ஆகவே அவர்களும் காவல்துறையினர் தங்களுடைய வாயில் விசாரணையை நடத்தியதில் கள்ளக்காதல் விவகாரம் காரணமாக, கணவரை கொலை செய்ததாக அவரை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, ஜெகதீஸ்வரி மற்றும் ஏகாம்பரம் உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.