இந்திய அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு…! 8-ம் வகுப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்…!

இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Staff Car Driver பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு என நான்கு காலி பணியிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிபணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையின் 2 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும். மேலும் பணிக்கு கல்வித்தகுதியாக அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்வி நிலையத்தில் விண்ணப்பதாரர்கள் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானதாகும்.


விண்ணப்பதாரர் வாகனம் ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர் கட்டாயம் ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். பணிக்கு தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்களுக்கு 7th CPC என்கிற ஊதிய அளவின் படி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. விண்ணப்பிக்க வாழும் இல்ல நபர்கள் கீழே இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு விரைவு அஞ்சல் செய்ய வேண்டும். மேலும் பணி தொடர்பான தகவல்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

For More Info: https://tamilnadupost.nic.in/Documents/2022/Mar-2022/SR%20Staff%20Car%20Driver%20Notification%20-%2017%20March%202022.pdf

Vignesh

Next Post

அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!

Tue Oct 4 , 2022
மின்துறை ஊழியர்களின் போராட்டம் தீபாவளி வரை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக போராட்டக்குழு அறிவித்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் அரசின் மின்துறையை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை கடந்த ஆட்சி காலத்திலேயே மத்திய அரசு தொடங்கியது. இதனை கண்டித்து மின்துறை பொறியாளர்கள், ஊழியர்கள் இணைந்து எதிர்ப்பு போராட்டக்குழுவை உருவாக்கி போராட்டம் நடத்த தொடங்கினர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் மின்துறையை தனியார் மயமாக்குவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து தனியார்மயம் தொடர்பான வரைவு அறிக்கை […]
அமைச்சரவைக் கூட்டத்தை பாதியிலேயே நிறுத்திய முதல்வர்..!! தீபாவளி வரை ஒத்திவைப்பு..!!

You May Like