இந்தியா VS ஜப்பான் டி20!. அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்தன!. வரலாற்றுச் சாதனை!.

india vs japan cricket ticket 30kb

இந்தியா மற்றும் ஜப்பான் நாட்டின் ஆண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெறவுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் சர்வதேச டி20 போட்டிக்கான அனைத்து டிக்கெட்டுகளும் விற்றுத் தீர்ந்துவிட்டதாக ஜப்பான் கிரிக்கெட் சங்கம் (JCA) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


‘சுஸுகி கோப்பை’க்காக நடத்தப்படும் இப்போட்டி, ஜப்பானின் தோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் செப்டம்பர் 22 அன்று இந்திய நேரப்படி காலை 9:30 மணிக்குத் தொடங்குகிறது.

இந்தியா – ஜப்பான் இடையிலான 75 ஆண்டுகால தூதரக உறவைக் கொண்டாடும் வகையிலும், இருநாட்டு மக்களிடையேயான தொடர்பை விளையாட்டு மூலம் ஊக்குவிக்கும் ‘ஸ்போர்ட் 75’ (Sport 75) என்ற முயற்சியின் தொடக்கமாகவும் இப்போட்டி அமைகிறது. ஜப்பான் பிரதமர் சனே தகைச்சி மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான உச்சிமாநாட்டில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்த முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்றுச் நிகழ்வு குறித்துப் பேசிய பிசிசிஐ செயலர் தேவாஜித் சாய்கியா, பாரம்பரிய எல்லைகளைத் தாண்டி உலகளவில் கிரிக்கெட்டை வளர்க்க வேண்டிய பொறுப்பு பிசிசிஐக்கு இருப்பதாகக் குறிப்பிட்டார். தற்போதைய டி20 உலகக் கோப்பை சாம்பியனான இந்திய அணி, ஜப்பான் போன்ற புதிய பிராந்தியங்களில் விளையாடுவது ஆசியாவில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும், ஜப்பான் கிரிக்கெட் சங்கத்துடன் இணைந்து விளையாட்டை மேலும் வலுப்படுத்த பிசிசிஐ தொடர்ந்து செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜப்பானின் ஐச்சி-நகோயாவில் நடைபெறவுள்ள 2026 ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் கிரிக்கெட் தொடங்குவதற்கு சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பு இப்போட்டி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு மூத்த ஆண்கள் கிரிக்கெட் அணிகள் முதன்முறையாக நேருக்கு நேர் மோதும் இப்போட்டியைக் காண ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

1newsnationuser5

Next Post

Maggi முதல் குளிர்பானங்கள் வரை.. பேக்கெட் உணவுகளுக்கு வரப்போகும் அதிரடி கட்டுப்பாடு!

Fri Sep 11 , 2026
இந்தியாவில் அதிக சர்க்கரை, உப்பு மற்றும் நிறைவுற்ற கொழுப்பு கொண்ட பேக்கெட் உணவுகளுக்கு முன்புறத்திலேயே எச்சரிக்கை லேபிள் ஒட்டும் நடைமுறையை கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் மூலம் ஒரு உணவுப் பொருளில் உடல்நலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளதா என்பதை நுகர்வோர் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். இந்தியர்களின் உணவுப் பழக்கத்தில் பேக்கெட் உணவுகளின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்த விலையில் கிடைக்கும் […]
WhatsApp Image 2026 09 11 at 2.36.30 PM 1

You May Like