மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை இது கட்டாயம்…! ஆசிரியர்கள் தான் முழு பொறுப்பு…!

திருவாரூர் மாவட்டத்திலுள்ள அரசு, நகராட்சி,ஆதி திராவிடர் நல,அரசு உதவிபெறும் பள்ளிகளில் முதுகலை, பட்டதாரி, இடைநிலை, சிறப்பாசிரியர்கள், உடற்கல்வி கற்றல் பணிபுரியும் ஆசிரியர்கள் ஈடுபட மாணவர்களுக்கு பாடக்குறிப்புகள் மற்றும் கல்வி உபகரணங்களை முறையாக பயன்படுத்தி கற்பித்தல் செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும்.


மாணவர்களின் பாடக்குறிப்பேடுகள் மற்றும் கையெழுத்துப் பயிற்சி ஏடுகள் உரிய தேதியில் திருத்தப்பட்டு கையொப்பமிட வேண்டும். மேலும், ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை பாடக்குறிப்பேடுகளை தலைமையாசிரியர்களுக்கு முன்னிலைப்படுத்த வேண்டும். முன்னிலைப்படுத்தாத ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்க நேரிடும் என்ற விவரத்தினை ஆசிரியர்களுக்கு தெரிவித்திடவும், இதில் தனி கவனம் செலுத்திடவும் அனைத்து வகை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

IMG 20230619 063316

Vignesh

Next Post

#Breaking: கனமழை எதிரொலி...! மேலும் இரண்டு மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை...!

Mon Jun 19 , 2023
திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது . இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ அநேக இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்‌, கடலார்‌, மயிலாடுதுறை, நாகப்பட்டினம்‌, திருவாரூர்‌, தஞ்சாவூர்‌, திருச்சிராப்பள்ளி, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மாவட்டங்கள்‌, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என […]
202111100714566104 Heavy rain Holidays for schools and colleges in any SECVPF

You May Like