7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.! நீதிமன்றம் விதித்த அதிரடி தீர்ப்பு.!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உக்கடம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் கூலி தொழிலாளியாக வசித்து வந்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டில் இரண்டாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி செந்தில்குமாரின் வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது.


அந்த சிறுமியை மிட்டாய் வாங்கி தருவதாக கூறி ஆசை காட்டி வீட்டிற்குள் அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை செய்துள்ளார். ஏதோ அசௌகரியமாக நடப்பதை உணர்ந்த சிறுமி அங்கிருந்து தப்பியோடு தனது பெற்றோரிடம் அழுது கொண்டே கூறியுள்ளார்.

இதனை தொடர்ந்து அதிர்ந்து போன பெற்றோர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் செந்தில் குமார் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் சட்டத்தின் கீழ் செந்தில்குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.

இத்தகைய சூழலில் இன்று இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் இதில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இரண்டு லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

1newsnationuser5

Next Post

சென்னை – பெங்களூரு இடையே ’வந்தே பாரத் .. அடுத்த மாதம் சீறி வருகின்றது !!

Sun Oct 16 , 2022
சென்னை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் சேவை தொடங்க உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நாட்டிலேயே அதி வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றது. 160 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் 52 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை உடனடியாக அடைந்துவிடுகின்றது.இந்த ரயில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஏற்கனவே புது டெல்லி-வாரணாசி […]
vande barath

You May Like