அஜாக்கிரதையாக இருந்த பள்ளி வேன் ஓட்டுநர்.. சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுமி பலி.!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த சுவாமி என்பவருக்கு உமா என்ற மனைவியும் ரக்ஷா என்ற நான்கு வயது மகளும் இருக்கின்றனர். ரக்ஷா கனகபுரா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.


இத்தகைய நிலையில், பள்ளி முடிந்து ரக்ஷா வேனில் வீட்டிற்கு வந்தார். அப்போது வேனின் கதவு தானாகவே திறந்து கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார்.

ஒரு வளைவில் திரும்பிய போது படிக்கட்டு அருகில் அமர்ந்து இருந்த ரக்ஷா வேனில் இருந்து சாலையில் தவறி விழுந்தார். இதில், ரக்ஷா மீது வேனின் பின்பக்கர சக்கரம் ஏறு இறங்கியது. இதன் காரணமாக, சிறுமி ரக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்த நிலையில் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக அஜாக்கிரதையாக செயல்பட்ட வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

கள்ளக்காதலை முறித்துக்கொண்டதால் 7 வயது சிறுவன் கொலை.. போலீஸ் விசாரணையில் தெரியவந்த பேரதிர்ச்சி தகவல்.!

Wed Jan 11 , 2023
மகராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் கல்யாண் பகுதியில் 7 வயது சிறுவன் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பள்ளிக்கு வழக்கம் போல சென்ற அந்த சிறுவன் மீண்டும் வீட்டிற்கு திரும்பவில்லை. இதனால் பதறிப்போன பெற்றோர் சிறுவனை தேடி பல இடங்களில் அலைந்து திரிந்தனர். ஆனாலும், சிறுவன் எங்கும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து, காவல் நிலையத்தில் சிறுவனை காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், வீட்டிற்கு […]
கைது

You May Like