கர்நாடக மாநிலத்தில் உள்ள பகுதியைச் சேர்ந்த சுவாமி என்பவருக்கு உமா என்ற மனைவியும் ரக்ஷா என்ற நான்கு வயது மகளும் இருக்கின்றனர். ரக்ஷா கனகபுரா பகுதியில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் எல்கேஜி படித்து வந்துள்ளார்.
இத்தகைய நிலையில், பள்ளி முடிந்து ரக்ஷா வேனில் வீட்டிற்கு வந்தார். அப்போது வேனின் கதவு தானாகவே திறந்து கொண்டது. இதை கவனிக்காத ஓட்டுநர் வாகனத்தை வேகமாக இயக்கியுள்ளார்.
ஒரு வளைவில் திரும்பிய போது படிக்கட்டு அருகில் அமர்ந்து இருந்த ரக்ஷா வேனில் இருந்து சாலையில் தவறி விழுந்தார். இதில், ரக்ஷா மீது வேனின் பின்பக்கர சக்கரம் ஏறு இறங்கியது. இதன் காரணமாக, சிறுமி ரக்ஷா சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இது குறித்து காவல்துறையினர் தகவல் அறிந்த நிலையில் வழக்கு பதிவு செய்து சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்திற்கு காரணமாக அஜாக்கிரதையாக செயல்பட்ட வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.