உஷாரைய்யா….. உஷாரு…… கர்நாடகத்தில் வெற்றியை நோக்கி காங்கிரஸ்…..! கட்சி தாவலை தடுக்க காங்கிரஸ் தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை……! தியானத்தில் அமர்ந்த பிரியங்கா காந்தி…..!

கர்நாடக மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் ஆட்சி அமைப்பதற்கு 113 தொகுதிகளில் தேவை என்ற நிலையில், காங்கிரஸ் கட்சியை நோக்கி 119 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது அதேநேரம், ஆளுங்கட்சியான பாரதிய ஜனதா 71 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சி அதிக. தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வருவதால், கர்நாடக மாநிலத்தில் அந்த கட்சியின் தொண்டர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்படுகிறார்கள்.


இதனைத் தொடர்ந்து, கட்சி தாவலை தடுக்கும் விதமாக, முன்னிலையில் இருக்கின்ற வேட்பாளர்களை பெங்களூருவுக்கு அழைத்திருக்கிறது கட்சி தலைமை. அவர்களை அழைத்து வருவதற்கு 12 ஹெலிகாப்டர்கள் செல்ல உள்ள நிலையில், பெங்களூருவில் ரிசார்ட்டும் தயாராக இருக்கிறதாம்.

இதற்கு நடுவே சிம்லாவில் இருக்கின்ற ஜக்கு ஆலயத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வழிபாடு செய்தார். அதோடு, கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து தியானத்திலும் ஈடுபட்டார்.

Next Post

கர்நாடகத்தில் நாளை நடைபெறுகிறது…..! காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம்……!

Sat May 13 , 2023
கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடித்திருக்கிறது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் நாளைய தினம் நடைபெற உள்ளது என்று தற்போது தகவல் கிடைத்திருக்கிறது. இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் யார்? என்று தேர்வு செய்யப்படும் என தெரிகிறது. முன்னாள் முதல்வர் சித்துராமையா, மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் டி.கே.சிவகுமார் உள்ளிட்டோர் இடையே முதலமைச்சர் பதவிக்கான போட்டி நிலவி வருவதாக கூறப்படுகிறது.
202203121620014279 Tamil News tamil news Congress Working Committee meeting tomorrow in SECVPF

You May Like