பிரபல கர்நாடக துறவி சித்தேஸ்வர சுவாமிகள் உடல் குறைவால் காலமானார்.
பிரபல கர்நாடக துறவியும், மூத்த லிங்காயத் துறவியுமான சித்தேஸ்வர சுவாமிகள், நீண்டகாலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 81. உடல் நலக்குறைவாழ் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்த அவர் மருத்துவமனை சென்று சிகிச்சை எடுக்க மறுத்துள்ளார். வயது தொடர்பான நோய்களை எதிர்கொண்டு சக்கர நாற்காலியில் இருந்துள்ளார். இவரது மறைவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில்; சமூகத்திற்கு அவர் செய்த சிறந்த சேவைக்காக அவர் நினைவுகூரப்படுவார். மற்றவர்களின் முன்னேற்றத்திற்காக அயராது உழைத்தவர். அவரது அறிவார்ந்த ஆர்வத்திற்காகவும் மதிக்கப்பட்ட நபர் என்று பிரதமர் மோடி தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.