ஒரு தலைமை ஆசிரியர் செய்யிற வேலையா இது?இறுதியில் மாணவிகள் எடுத்த அதிரடி முடிவு!

நாட்டில் தற்போது பள்ளி குழந்தைகளுக்கு எதிரான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது அதுவும் ஆசிரியர்களே அது போன்ற தகாத செயல்களில் ஈடுபடுவது வருத்தம் அளிக்கிறது.ஆனால் அப்படி தகாத செயல்களில் ஈடுபடும் ஆசிரியர்களை மாணவிகளே தட்டிக் கேட்கும் அளவிற்கு துணிச்சலாக மாணவிகள் அனைவரும் இருந்து விட்டால் பின்பு நிச்சயமாக இது போன்ற தவறுகள் குறைவதற்கான வாய்ப்புள்ளது.


அதே போன்ற ஒரு சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நடைபெற்றிருக்கிறது .கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் இருக்கின்ற கட்டேரி கிராமத்தில் மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பள்ளி அருகிலேயே மாணவிகள் தங்கும் விடுதி இருக்கிறது. இங்கே 30க்கும் அதிகமான மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள், இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக சின்மயமூர்த்தி என்பவர் இருந்து வருகிறார்.

இவர் கடந்த சில மாதங்களாக இரவில் மாணவிகள் தங்கும் விடுதிக்கு வந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இப்படி அந்த மாணவிகளின் விடுதிக்கு வரும் தலைமை ஆசிரியர், சில மாணவிகளை தன்னுடைய அறைக்கு அழைத்துச்சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு வழங்கியதாக கூறப்படுகிறது. அத்துடன் செல்போன்களில் ஆபாச வீடியோக்களை காட்டி தன்னுடைய காம இச்சைக்கு இணங்க மாணவிகளை அவர் கட்டாயப்படுத்தி வந்திருக்கிறார்.

ஆகவே மாணவிகள் இவர் மீது கடுமையான கோபத்தில் இருந்திருக்கின்றனர். இந்த சூழ்நிலையில்தான் நேற்று முன்தினம் இரவு மாணவிகள் விடுதிக்கு வந்த தலைமை ஆசிரியர் தன்னுடைய அறைக்கு வரவழைத்த ஒரு மாணவியிடம் பாலியல் ரீதியான சீண்டலில் ஈடுபட்டுள்ளார். ஆகவே அதிர்ச்சிகுள்ளான அந்த மாணவி, கத்தி கூச்சலிட்டபடி அறையில் இருந்து வெளியே ஓடிவந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக சக மாணவிகளிடம் தெரிவித்து கதறி அழுத்திருக்கிறார் அந்த மாணவி. இதனை கேள்விப்பட்டவுடன் சக மாணவிகள் சிங்கப்பெண்களாக உருவெடுத்து, கைகளில் உருட்டு கட்டைகளுடன் தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றுள்ளனர். இதனை கண்ட தலைமை ஆசிரியர் அதிர்ச்சியடைந்து தன்னுடைய அறையை மூட முயற்சி செய்திருக்கிறார்.

ஆனாலும் மாணவிகள் கதவை இடித்து தள்ளிவிட்டு உள்ளே சென்று அவரை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். அவர் தான் தவறு செய்யவில்லை என்று தெரிவித்திருக்கிறார். அப்போது அங்கு வந்த பாதிக்கப்பட்ட மாணவி கதறி அழுதபடி தன்னிடம் அவர் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று தெரிவித்திருக்கிறார். உடனடியாக அவரை சுற்றி வளைத்த மாணவிகள் உருட்டு கட்டையால் அவரை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

இதன் நடுவே இந்த சம்பவம் அந்த பகுதி மக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அவர்களும் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர். தலைமை ஆசிரியர் சின்மயமூர்த்திக்கு தர்ம அடி வழங்கி உள்ளனர். அத்துடன் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்து அந்த தகவலின் அடிப்படையில் விரைவாக வந்த காவல்துறையினர் அவரை கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரித்தனர்.

காவல்துறையினரின் இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்திருக்கிறது. அதாவது, அவர் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை தன்னுடைய காம லீலைகள் மூலமாக வீழ்த்தியதும், அவருடன் உல்லாசமாக இருந்ததை செல்போனில் படம் பிடித்து வைத்திருப்பதும், அந்த வீடியோக்களை காட்டி மாணவிகளிடம் தலைமை ஆசிரியர் சில்மிஷத்தில் ஈடுபட்டதும் தன்னுடைய ஆசைக்கு இணங்கவில்லை என்றால் தேர்வில் மதிப்பெண்ணை குறைத்து விடுவதாகவும், மாற்றுச் சான்றிதழை கொடுத்து அனுப்பி விடுவதாகவும் மிரட்டி வந்திருக்கிறார் அந்த தலைமை ஆசிரியர்.

ஆகவே மாணவிகள் பயந்து தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்து வந்திருக்கிறார்கள் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்திருக்கின்றனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

மாணவர்களே இன்று பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது என அறிவிப்பு...!

Sat Dec 17 , 2022
மாண்டஸ் புயல் மழையின் காரணமாக கடந்த 9-ம் தேதி அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், இன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அறிவித்துள்ளார். இது குறித்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்ஸ் அனுப்பி உள்ள கடிதத்தில்; மாண்டஸ் புயல் மழையின் காரணமாக 9-ம் தேதி சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து […]
அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை..! தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் மூடல்..!

You May Like