பொண்ணு கேட்டு போனது குத்தமா.? பேஸ்புக் இளைஞருக்கு நிகழ்ந்த மோசமான சம்பவம்.!

பேஸ்புக் ஆப் மூலமாக ஒரு பெண்ணை காதலித்து வந்த இளைஞர், அவரது வீட்டு அட்ரஸை கண்டுபிடித்து வீட்டிற்கு சென்று பெண் கேட்ட சம்பவத்தால் போலீசில் சிக்கியுள்ளார்.


கிருஷ்ணகிரி பகுதியில் சேர்ந்த நிஷோர் என்ற இளைஞர் முகநூல் செயலியின் மூலம் கன்னியாகுமரி மாவட்டத்தில் வசித்து வரும் ஷாலியா என்னும் பெண்ணை காதலித்து வந்துள்ளார். இருவரும் பேஸ்புக் மூலமாகவே நட்பாக பழகி காதலிக்க ஆரம்பித்த நிலையில் செல்போன் எண்களை பரிமாறிக் கொண்டனர்.

வீட்டு அட்ரஸை வாங்கிய நிஷோர் கூகுள் மேப்பை பயன்படுத்தி அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டுள்ளார். இளைஞரின் செயலால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் அந்த இளைஞரை அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் கொலை மிரட்டல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருமணத்திற்கு பெண் கேட்டு போனதால் ஒரு இளைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1newsnationuser5

Next Post

காவல்துறையில் காதல் மன்னன்! பெண்களை ஏமாற்றி பல லட்சம் மோசடி!

Fri Feb 10 , 2023
திருமணம் செய்வதாக ஆசை காட்டி  விதவைப் பெண்ணை பலமுறை பலாத்காரம் செய்து  அவரிடமிருந்து நகை மற்றும்  பணம் பறித்த காவலரால்  காரைக்கால் பகுதியில் அதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது. காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியை அடுத்த கீழசுப்பராயபுரம் பகுதியைச் சார்ந்த இளம் விதவை சுதா வயது 39. இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுடன்  திருநள்ளாறில் வாழ்ந்து வருகிறார். மேலும் அங்கிருக்கும் காய்கறி கடை ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டு தனது […]
WhatsApp Image 2023 02 10 at 6.44.32 PM

You May Like