திருச்சி மாவட்ட பகுதியில் உள்ள கே.கே நகரில் அருகில் உள்ள கே. சாத்தனூர் களத்து மேடு பகுதியில் வசித்து வருபவர் சுப்பிரமணியன். இவரது மகள் ஜோதிமணி.
மகள் முதுகலை படிப்பை முடித்துள்ளார். இவா் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அந்த இளைஞன் அவளை விட வயதில் சிறியவன்.
மேலும், அவர் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்பதாலும், இவர்களின் காதலுக்கு பெற்றோா் சம்மதிக்கவில்லை. அத்துடன் இருவரின் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பை தெறிவித்துள்ளனர்.
இதையறிந்த ஜோதிமணியை காதலித்த வாலிபர் பதினைந்து நாட்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தகவல் ஜோதிமணிக்கு திங்கள்கிழமை மதியம் தெரியவந்தது.
இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.