நிலப் பிரச்சனையில் முன்விரோதம்! மதுரை மேலூர் அருகே டிராவல்ஸ் உரிமையாளர் படுகொலை!

முன்பெல்லாம் கிராமப்புறங்களில் 2 குடும்பங்களுக்கிடையே சொத்து தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட தகராறுகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற வளாகங்களை தான் மக்கள் நாடி வந்தார்கள்.ஆனால் நீதிமன்ற வளாகங்களை நாடினால் அவர்களுக்கான தீர்வு உடனே கிடைத்துவிடாது. குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இது போன்ற சிவில் வழக்குகளில் விசாரணை நடைபெறும்.


நீதி என்றாலே தாமதமாக தான் கிடைக்கும் என்பது நிதர்சனமான உண்மை. காரணம், ஒரு தவறு நடைபெற்றிருந்தால் அது எப்படி நடந்தது, யாரால் நடந்தது, அதற்கு யார் காரணம் என்பது போன்ற முக்கிய அம்சங்களை ஆராய்ந்து அதன் பிறகு தான் நீதிமன்றம் தன்னுடைய முடிவை கூற இயலும்.ஆனால் தற்போது மக்களிடையே பொறுமையாக காத்திருந்து நீதியை பெற வேண்டும் என்ற அளவிற்கு பொறுமை எல்லாம் இல்லாமல் போய்விட்டது.

அந்த வகையில், மதுரை அண்ணாநகரை சேர்ந்தவர் சுரேஷ்(45), இவர் அந்த பகுதியில் சுற்றுலா நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். இவருக்கு மேலவளவு அருகே இருக்கின்ற சாம்பிராணி பட்டியில் ஒரு தோட்டம் இருக்கிறது. இவருக்கும், சாம்பிராணி பட்டியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், கார்மேகம் உள்ளிட்டோரிக்கிடையே நில தகராறில் முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் சுரேஷ் நேற்று முன்தினம் தன்னுடைய தோட்டத்திற்கு சென்று விட்டு பின்பு வீடு திரும்பிய போது அவரை வழிமறித்த மர்ம கும்பல் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றது. இது குறித்து மேல வளவு காவல் நிலைய ஆய்வாளர் சாந்தி அவர்களின் தலைமையில் நடத்தப்பட்ட விசாரணையில், நிலப்பிரச்சனை காரணமாக, முன்பிரோதம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து கோபாலகிருஷ்ணன், கார்மேகம்(45), அஜித்பாலன், ராமர், அவருடைய மனைவி பாண்டிச்செல்வி , மலைச்சாமி, திருமலை, அழகம்மாள் உள்ளிட்ட 9 பேரை டிஎஸ்பி பிரியதர்ஷினி தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தேடி வருகிறார்கள். கோபாலகிருஷ்ணன் ஏற்கனவே ரவுடிகளின் பட்டியலில் இருக்கிறார் என்று காவல்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

Next Post

இரும்புக்கு ஆசைப்பட்ட இளைஞருக்கு இரும்பாலேயே நேர்ந்த முடிவு! கொடூரமாக தாக்கி கொலை செய்யப்பட்ட நபர்!

Tue Dec 20 , 2022
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்யமூர்த்தி & கோ என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணியின் காரணமாக, அங்கே கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை அவ்வப்போது மாயமானதாக கூறப்படுகிறது. ஆகவே இங்கு வந்து பொருட்களை திருடிச் செல்வது யார் என்று தெரியாமல் கட்டிட பணியாளர்கள் முதல் கொண்டு ஒப்பந்ததாரர் வரையில் மிகுந்த குழப்பத்தில் இருந்திருக்கிறார்கள்.இந்தத் திருட்டை எப்படியாவது […]
murder 5

You May Like