26 லட்சம் ரூபாய் பணத்தை ஏமாற்றிய நிதி நிறுவனம்…..! கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர் வேலூர் அருகே பரபரப்பு….!

வேலூரை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி கொடுப்பதாக தெரிவித்து பொதுமக்களிடம் சுமார் 6000 கோடி மோசடி செய்துள்ளதாக தொடர்ந்து புகார்கள் வந்தனர். இதுகுறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.


இந்த வழக்கு குறித்து பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் ஏற்கனவே 6 பேரை கைது செய்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தான் அந்த நிறுவனத்தின் முக்கிய இடைத்தரகரான காஞ்சிபுரத்தைச் சேர்ந்த வெங்கடேசன்( 36) என்பவர் சென்ற வாரம் கைது செய்யப்பட்டார்.

இத்தகைய நிலையில், அந்த நிதி நிறுவனத்தில் 26 லட்சம் ரூபாயை முதலில் செய்து பணத்தை இழந்த வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளேரி பகுதியைச் சேர்ந்த பிரசாத்(39) என்பவர் நேற்று தற்கொலை செய்து கொண்டார் தன்னுடைய தற்கொலைக்கு காரணம் ஐஎஃப்எஸ் நிதி நிறுவனம் தான் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டிலேயே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மேலும் அந்த கடிதத்தில், அவர் தெரிவித்து இருப்பதாவது அதிக வட்டி கொடுப்பதாக ஆசை வார்த்தை தெரிவித்ததால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பெரிய கரும்பூரைச் சேர்ந்த வெங்கடேஷிடம் 26 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்து விட்டேன். அவர் அந்த நிதி நிறுவனத்தின் ஏஜெண்டாக செயல்பட்டு வந்தார் மேலும் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினரால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடன் வாங்கி அவ்வளவு பணத்தையும் அவரிடம் கொடுத்திருந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார் அந்த நபர்.

மேலும் எனக்கு கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்பதால் என்னால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. தனிப்பட்ட முறையிலேயே நான் 12 லட்சம் ரூபாய்க்கும் மேலாக வட்டி கொடுத்துவிட்டேன் அதிக கடன் சுமையில் நான் மாட்டிக் கொண்டேன். என்னுடைய சாவுக்கு ஐ.எஃப்.எஸ் நிதி நிறுவனம் தான் காரணம், தயவு செய்து இது தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டு பாதிக்கப்பட்டோரிடம் அவர்களுக்கான பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த குடியாத்தம் காவல் துறையினர் பிரசாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தையும் கைப்பற்றி காவல்துறையினர் காவல்துறையினர் விசாரணையை மேற்கொண்டு வருகின்றன. ஏற்கனவே இதே நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்த காட்பாடி சார்ந்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

தயிர் சாப்பிடும்போது இதையும் சேர்த்துக்கோங்க..!! இந்த பிரச்சனைகள் உங்களை நெருங்கவே நெருங்காது..!!

Wed May 3 , 2023
பொதுவாக பலரும் பால் மற்றும் தயிர் அதிகமாக உட்கொள்வதற்கு அதில் இருக்கும் கால்சியம் மற்றும் புரதம் உள்ளிட்ட அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதே முக்கிய காரணம். இவை நம் உடலை பலப்படுத்தி ஊட்டச்சத்து குறைபாடுகளை நீக்குகிறது. கோடையில் தயிர் உடலுக்கு மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. இதனால் மதிய உணவு தயிர் இல்லாமல் இருக்காது. அப்படி நீங்கள் வெயிலை சமாளிக்க தயிரை உட்கொள்கிறீர்கள் என்றால், அதில் சில பொருட்களைக் கலந்து சாப்பிட்டால், […]
curd

You May Like