காணாமல் போன 7 வயது சிறுமி! சாக்கு முட்டையிலிருந்து பிணமாக மீட்பு! அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர் கைது!

கொல்கத்தாவைச் சார்ந்த ஏழு வயது சிறுமி கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டைக்குள் சடலத்தை மறைத்து வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொல்கத்தாவின் ஸ்ரீதர் ராய் ரோடு பகுதியைச் சார்ந்த ஏழு வயது சிறுமி ஞாயிற்றுக்கிழமை காலை முதல் காணாமல் போய் இருக்கிறார். அவரை எங்கு தேடியும் கிடைக்காததால் நண்பகல் 12:00 மணி அளவில் அவரது குடும்பத்தினர் சிறுமியை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறை விசாரணையை தொடங்கி அந்த சிறுமியை தேட ஆரம்பித்திருக்கிறது. எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா ஒன்றில் பதிவான காட்சிகளின் படி அருகில் இருந்து அடுக்குமாடி குடியிருப்புக்குள் சிறுமி சென்றது பதிவாகி இருக்கிறது. ஆனால் காவல்துறையினர் என்ன செய்வது என்று தெரியாமல் மற்ற பகுதிகளிலேயே தேடினர்.


இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவர்கள் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். அவர்கள் தங்கியிருந்த குடியிருப்புக்கு அருகிலிருந்த ஒரு அடுக்குமாடி வீட்டில் கதவு மூடியே இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொது மக்கள் அந்த கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சிறுமி சாக்கு முட்டைக்குள் பிணமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக அந்த கட்டிடத்தின் உரிமையாளரான பீகாரைச் சார்ந்த அலோக் குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையின் விசாரணையில் அவர் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவரும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் சிறுமியின் உடலில் தலை மற்றும் காது பகுதிகளில் காயம் இருந்ததாகவும் காவல்துறை தெரிவித்து இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினரின் அலட்சியத்தை கண்டித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது பதற்றம் ஏற்பட்டது.

1newsnationuser5

Next Post

சூடான அடுப்பின் மீது அமர்ந்து பீடி புகைத்து பக்தர்களுக்கு ஆசி வழங்கும் சூப்பர் பாபா! யார் இவர் ?

Mon Mar 27 , 2023
எரியும் அடுப்பின் மீது அமர்ந்து பக்தர்களுக்கு ஆசிர்வாதம் வழங்கும் ஒரு சாமியாரின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங்காகி இருக்கிறது. விறகு மூட்டப்பட்டு தனலாய் கொதிக்கும் அடுப்பின் மீது ஒரு பலகையில் அமர்ந்திருக்கும் சாமியார் தன்னைக் காண வரும் பக்தர்களுக்கு பீடி புகைத்தவாறு ஆசிர்வாதத்தை வழங்குகிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் டிரண்டாகி இருக்கிறது சில பக்தர்கள் அவருக்கு விறகு மூட்டி அதில் நெருப்பு பற்றவைத்தும் அவரிடமிருந்து ஆசிர்வாதம் […]
IMG 20230327 WA0093

You May Like