3 குழந்தைகளுக்கும் விஷத்தைக் கொடுத்து விட்டு தானும் தூக்கிட்டு இறந்த தாய்..!

கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.


இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் கூறியதாவது, ஹோலா தெருவில் கார் மெக்கானிக்கான அகில் தனது மனைவி உஸ்னாகவுசர் (30) மற்றும் குழந்தைகளுடன் என்பவருடன் வசித்து வந்துள்ளார். 

தம்பதிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக மனைவி நேற்றிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அதற்கு முன்பாக உஸ்னாகவுசர் தனது மகன் ஹாரிஸ் (7), இரு மகள்களான அல்லிசா (4) மற்றும் அனம் பாத்திமா (2) ஆகியோர்க்கும் விஷத்தினை கொடுத்துள்ளார். 

இதனை தொடர்ந்து இன்று காலையில் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை கண்டு அகில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

1newsnationuser5

Next Post

அம்மாடியோவ்..!! Call Setting-இல் இவ்வளவு விஷயம் இருக்கா..? இனி கவலையே வேண்டாம்..!!

Sat Dec 3 , 2022
இன்றைய கால கட்டத்தில் ஸ்மார்ட் போன் இல்லாத வீடுகளே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு ஸ்மார்ட் போனின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது. நாம் ஒருவரை தொடர்பு கொள்வதற்கு Call செய்கின்றோம். அதுபோல அந்த Incoming Call Setting-இல் எவ்வளவு Tricks இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா..? அந்த வகையில், இன்று இந்த பதிவின் மூலம் Incoming Call Setting -ல் இருக்கும் Tricks பற்றி தெரிந்து கொள்ளலாம். […]

You May Like