கர்நாடகா மாநில பகுதியில் உள்ள மாண்டியாவில் நேற்றைய தினத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறின் காரணமாக தனது 3 குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு அதன்பின்னர் தாயும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த சம்பவமானது மத்தூர் நகர் பகுதியில் ஹோலா தெருவில் நடைபெற்றுள்ளது. இது குறித்து மாண்டியா பகுதி காவல்துறையினர் கூறியதாவது, ஹோலா தெருவில் கார் மெக்கானிக்கான அகில் தனது மனைவி உஸ்னாகவுசர் (30) மற்றும் குழந்தைகளுடன் என்பவருடன் வசித்து வந்துள்ளார்.
தம்பதிகள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக மனைவி நேற்றிரவில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆனால் அதற்கு முன்பாக உஸ்னாகவுசர் தனது மகன் ஹாரிஸ் (7), இரு மகள்களான அல்லிசா (4) மற்றும் அனம் பாத்திமா (2) ஆகியோர்க்கும் விஷத்தினை கொடுத்துள்ளார்.
இதனை தொடர்ந்து இன்று காலையில் மனைவி மற்றும் குழந்தைகள் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை கண்டு அகில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது. மேலும், தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.