“உன் செருப்ப, எங்க வீட்டு வாசல்ல தான் கழட்டி போடுவியா” என்று ஆரம்பித்த தகராறு கொலையில் முடிந்த பரிதாபம்!

காலணியை தங்கள் வீட்டு வாசலில் கழற்றி வைத்ததற்காக ஏற்பட்ட தகராறில் ஒருவரை கொலை செய்திருக்கிறார்கள் மும்பையைச் சார்ந்த ஒரு தம்பதி. இது தொடர்பாக மனைவி கைது செய்யப்பட்ட நிலையில் கணவரை காவல்துறை தேடி வருகிறது. மும்பையின் தானே மாவட்டத்தில் நயா நகர் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார் அப்சர் காதரி(54). இவருக்கும் அவரது பக்கத்து வீட்டில் இருக்கும் தம்பதியினருக்கும் இடையே காலணியை வாசலில் கழற்றி வைப்பது தொடர்பாக அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்திருக்கிறது.


இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இதே போன்ற ஒரு வாக்குவாதம் முற்றி கைகலப்பில் முடிந்துள்ளது. இந்த சண்டையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் சேர்ந்து அஃப்சரை பலமாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மும்பை காவல்துறை இந்தக் கொலையைச் செய்த தம்பதிகளில் மனைவியை மட்டும் கைது செய்துள்ளனர். அவரது கணவர் தப்பிச் சென்று விட்டார். அவரை காவல்துறை தீவிரமாக தேடி வருவதாக நயா நகர் காவல் துறை ஆய்வாளர் ஜிலானி செய்யத் தெரிவித்தார்.

1newsnationuser5

Next Post

"எடுபட்ட பய....... பித்தளை செயின திருட....." எஸ்கேப் ஆன பாட்டி! திருநெல்வேலியில் சுவாரசியம்!

Sun Mar 5 , 2023
தனது கழுத்தில் அணிந்திருந்த செயினை பறிக்க வந்த திருடர்களிடம் “ஏலே, அது பித்தளைச் செயின்” என ஒரு மூதாட்டி கூறியதால் அந்தத் திருடர்கள் செயினை போட்டுவிட்டு விரக்தியில் சென்றுள்ளனர். இந்த சுவாரசியமான சம்பவம் நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று இருக்கிறது. தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டம் நாரணம்மாள்புரம் பகுதியைச் சார்ந்தவர் மூதாட்டி கணபதி. இவர் தனது வீட்டு வாசலில் அமர்ந்திருக்கிறார். அப்போது […]
IMG 20230305 WA0145

You May Like