ஒருவருடன் விரோதம் என்று வந்து விட்டால் அவரை எப்படியாவது பழி தீர்த்தே தீர வேண்டும் என்ற எண்ணம் தற்போது எல்லோரிடமும் காணப்படுகிறது.
ஆனால் அந்த எண்ணம் நம்முடைய மனதிற்குள் ஆழமாக வேரூன்றி இருப்பதால், அது நம்முடைய எதிரிக்கு மட்டும் கெடுதல் அல்ல நம்முடைய உடலுக்கும் கெடுதல் தான் என்பதை பலர் அறிவதில்லை.
ஒரு மனிதனின் மனதில் நல்லெண்ணங்கள் குடி கொண்டாலே அவருடைய உடலுக்கு வரும் தீமைகள் குறையும் என்று ஒரு மருத்துவ ஆய்வு சொல்கிறது.
அந்த வகையில், மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள லோக் மானியா திலக் மார்க் பகுதியில் நேற்று அதிகாலை 62 வயது உடைய ஒரு நபர் மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த பெண் மீது ஆசிட் வீசி உள்ளதாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சம்பவத்தால் பலத்த காயமடைந்த அந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான 62 வயதான அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், அவர்கள் திடுக்கிடும் தகவல்களை கூறினார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தெரிவிக்கும்போது தெற்கு மும்பையை சேர்ந்தவர் மகேஷ் பூஜாரி(65). இவரும் அதே பகுதியை சார்ந்த 50 வயதுடைய பெண்ணும் ஒரே வீட்டில் வசிந்து வந்தார்கள் 50 வயதுடைய பெண்ணின் கணவர் 15 வருடங்களுக்கு முன்னர் விவாகரத்து செய்து விட்டார்.
இந்த நிலையில், தான் மகேஷ் பூஜாரியுடன் அந்த பெண்மணிக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. ஒரே வீட்டில் கடந்த 2 வருடங்களாக வசித்து வந்திருக்கிறார்கள். அதேபோல மகேஷ் பூஜாரிக்கும் கடந்த 8 வருடங்களுக்கு முன்பு முதல் மனைவியுடன் விவாகரத்து ஏற்பட்டிருக்கிறது.
ஆனால் அந்தப் பெண்மணிக்கு இரு குழந்தைகள் இருக்கின்றனர். அந்த பெண் மும்பையில் உள்ள ஒரு மருத்துவமனையில் வேலை பார்த்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக, இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டிருக்கிறது.
இந்த நிலையில் தான் ஒரு நாள் அந்தப் பெண்ணின் குழந்தைகள் மகேஷ் பூஜாரியை வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு தெரிவித்திருக்கிறார்கள். அந்த பெண்ணும் முதல் மனைவியுடன் இருக்குமாறு தெரிவித்ததாக காவல்துறையினரின் தரப்பில் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, ஆத்திரமடைந்த மகேஷ் பூஜாரி அந்தப் பெண் வேலை பார்க்கும் இடத்திற்கு நேற்று அதிகாலை சென்றார். மருத்துவமனையில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்த அந்த பெண்ணின் மீது மகேஷ் பூஜாரி ஆசிட் வீசிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார். இதனை அறிந்து கொண்ட அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை சிகிச்சைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள் என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மருத்துவமனையின் ஊழியர்கள் தெரிவிக்கும்போது தாக்குதலுக்கு உள்ளான பெண்ணுக்கு சட்டையால குறைய 15 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருக்கிறது இந்த பெண்ணின் கழுத்து ,தலை தோள்பட்டை மற்றும் கைகளில் தீக்காயம் பெரிதாக இல்லை, சில தினங்களில் அவர் டிஸ்ஜார்ஜ் செய்யப்படுவார் என்று சொல்லி இருக்கிறார்கள்.
அத்துடன் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியான மகேஷ் பூஜாரியை கைது செய்து இருக்கிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.