#வேலூர்:மனைவியை மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்த கணவர்..துணை நின்ற மாமனார், மாமியார்..!

வேலூர் மாவட்ட பகுதியில் உள்ள திருமணி அடுத்த உண்ணாமலை சமுத்திரம் பகுதியில் மணி – முனியம்மா என்ற தம்பதியினருக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்களின் 2வது மகள் லட்சுமி. இவர்களின் உறவினர்களான ஆட்டோ ஓட்டுனர் ராஜேசுக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். 


ராஜேஷ் மற்றும் லட்சுமிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.  இந்நிலையில், நேற்று இரவு லட்சுமி வீட்டில் உயிரிழந்ததாக பெண் வீட்டிற்கு கணவர் தகவல் தெரிவித்த நிலையில், பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று பார்ப்பதற்குள் , லட்சுமியின் உடலை அப்புறப்படுத்தியுள்ளனர். 

திருமணம் ஆன நாளிலிருந்தே லட்சுமியை அவரது கணவர், மாமனார் மற்றும் மாமியார் துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையில் நேற்று லட்சுமியை அடித்து மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ததாகவும் உறவினர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதனை தொடர்ந்து காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். 

1newsnationuser5

Next Post

மருத்துவர்களாக அங்கீகாரம் பெற்ற முதல் திருநங்கைகள்..!

Fri Dec 2 , 2022
தெலுங்கானா மாநில பகுதியில் பிராச்சி ரத்தோட் மற்றும் ரூத் ஜான் பால் என்ற இரு திருநங்கைகள் வசித்து வருகின்றனர். திருநங்கைகள் இருவரும் மருத்துவம் பயின்று முடித்த நிலையில் பல்வேறு மருத்துவமனைகளில் இவர்களுக்கு வேலை மறுக்கப்பட்டுள்ளது.  பல இடங்களில் இப்படி வேலை கிடைக்காத நிலையில், தெலுங்கானா அரசு இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் வேலையை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து தெலுங்கானாவில் பணியமர்த்தப்பட்ட முதல் திருநங்கை இவர்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவரும் […]
Screenshot 2022 12 02 11 29 20 69 40deb401b9ffe8e1df2f1cc5ba480b12

You May Like