விமானத்தில் சுருண்டு விழுந்த ஏர் ஹோஸ்டஸ் மரணம்….! வருடத்தில் 4000 பேர் இறக்கும் அரியவகை நோய்!

கடந்த வருடம் டிசம்பர் மாதம் லண்டனில் தரையிறங்கிய அல்பேனிய நாட்டு விமானத்தின் பணிப்பெண் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்தார். இச்சம்பவம் தொடர்பாக மர்மம் நீடித்து வந்த நிலையில் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தற்போது அவரது மரணத்திற்கான விடை கிடைத்திருக்கிறது. ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாகப் பணியாற்றியவர் கிரேட்டா டைர்மிஷி வயது 24. இவர் கடந்த டிசம்பர் மாதம் லண்டனுக்கு சென்ற ஏர் அல்பேனியா விமானத்தில் பணி பெண்ணாக சென்றார். விமானம் லண்டன் ஏர்போர்ட்டில் தரையிறங்கியதும் திடீரென மயங்கி விழுந்தார் இவர். விமானத்திலிருந்து சக பயணிகள் இவரை சுயநினைவுக்கு கொண்டுவர முயற்சித்தும் பலனளிக்கவில்லை இது தொடர்பாக விமான நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் அங்கிருந்து வந்த அவசர மருத்துவ குழுவினரும் இவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து சுயநினைவு கொண்டு வர முயற்சித்தனர். ஆனால் பரிதாபமாக உயிரிழந்தார் கிரேட்டா. இவரது உடனடி இறப்பிற்கான காரணம் என்பது மர்மமாகவே நீடித்து வந்தது.


இவரது மரணம் தொடர்பான மர்மம் நீடித்து வந்தது. இது தொடர்பாக லண்டன் காவல்துறையினரும் தீவிரமாக விசாரணை செய்து வந்தனர். இந்நிலையில் இவரது உடற்கூறாய்வு அறிக்கையின் படி அவரது இறப்பிற்கான காரணம் தற்போது தெரிய வந்திருக்கிறது. அந்த அறிக்கையின் படி கிரேட்டா, அடல்ட் சடன் டெத் சின்றோம் என்ற அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இது ஒரு அரிய வகை நோயாகும். அமெரிக்காவில் இந்த நோய்க்கு வருடத்திற்கு 4000 பேர் இறப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. மேலும் இங்கிலாந்தில் இந்நோய்க்கு ஆண்டிற்கு 500 பேர் உயிரிழப்பதாகவும் தெரிகிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் விமானத்தில் மர்மமான முறையில் இறந்த பனிப் பெண்ணின் மரணத்தில் விடை கிடைத்திருக்கிறது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினரும் அவரது குடும்பத்திற்கு தங்களது அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

1newsnationuser5

Next Post

திருச்சி மதுரை மெயின் ரோட்டில் கார் மீது பைக் மோதி விபத்து! வட மாநிலத் தொழிலாளர்கள் இருவர் படுகாயம்!

Fri Feb 24 , 2023
திருச்சியில் நடந்த சாலை விபத்தில் வடமாநிலத்தைச் சார்ந்த இரண்டு தனியார் நிறுவன ஊழியர்கள் காயமடைந்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தைச் சார்ந்தவர்கள் முஹம்மது அஜீஸ் மற்றும் விஜேஷ் மிஸ்ரா. இவர்கள் இருவரும் திருச்சியில் உள்ள மணிகண்டம் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக பணியாற்றி வந்தனர். இருசக்கர வாகனத்தின் மூலம் தங்கள் அலுவலகம் செல்வதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் சம்பவம் நடந்த தினத்தன்று இவர்கள் பணிக்கு சென்று கொண்டிருந்தபோது திருச்சி மதுரை […]
IMG 20230224 WA0068

You May Like