மகிழ்ச்சி செய்தி…! வெளிநாடு செல்ல NOC… அரசு ஊழியர்களுக்கு ஈசியாக பாஸ்போர்ட்…! அரசாணை வெளியீடு

Tn Govt 2025

அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும் வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று பெறுவதற்காக எளிய முறையில் விண்ணப்பிப்பதற்கு தமிழக அரசு அரசாணை வெளியீடு.


வெளிநாடு பயணிக்கும் நபர்கள் வைத்திருக்க வேண்டிய அடிப்படையான ஆவணம் பாஸ்போர்ட். இதை பெறுவதற்கு ஒவ்வொரு அரசும் பிரத்யேக நடைமுறைகளை வைத்திருக்கின்றன. அதன்படி, இந்திய அரசு பிரத்யேக இணையதளம், பாஸ்போர்ட் அலுவலகங்கள் மூலம் விண்ணப்பிக்க அறிவுறுத்தியுள்ளது. அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டியது கட்டாயமான ஒன்றாக இருந்த வந்தது. ஆனால் தடையில்லா சான்று பெறுவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருப்பதாக பலரும் அரசுக்கு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில் அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கும், வெளிநாடு செல்வதற்கும் தடையில்லா சான்று (NOC) பெற வேண்டியது கட்டாயம். ஆனால் இதை பெறுவது மிகவும் சிக்கலான ஒன்றாக இருக்கிறது என்று பலரும் வேதனை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் மிக எளிய முறையில் விண்ணப்பித்து தடையில்லா சான்று பெறும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதில், தமிழக அரசின் SimpleGov முயற்சியின் கீழ் பாஸ்போர்ட் பெறுவது, அதனை புதுப்பிப்பது ஆகிய செயல்முறைகள் எளிமைபடுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக அடையாள சான்றிதழ், என்.ஓ.சி எனப்படும் தடையில்லா சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இவை தமிழ்நாடு அரசு ஊழியர்கள் நடத்தை விதிகள் 1973 விதி என் 24ஏ கீழ் அமலுக்கு வந்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண பாஸ்போர்ட்டிற்கு விண்ணப்பிக்கும் போது Annexure N –ல் குறிப்பிட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து சமர்பிக்க வேண்டும். பாஸ்போர்ட் விண்ணப்பத்துடன் Annexure N மாதிரி ஒன்று இருக்கும். இதை பூர்த்தி செய்து புதிய பாஸ்போர்ட் பெற அல்லது புதுப்பிக்க விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட துறையின் நிர்வாக தலைமைக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவற்றை IFHRMS மூலம் விண்ணப்பிக்க வேண்டும். தேவையான சான்றிதழ்கள் மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்.

Read more: Tn Govt: எச்ஐவி – எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும்…! தமிழக அரசு அறிவிப்பு…!

Vignesh

Next Post

காவல்துறையில் 25 வருடம் பணியாற்றியவர்களுக்கு பதவி உயர்வு...! தமிழக அரசு அரசாணை..!

Wed Jun 18 , 2025
காவல்துறையில் 25 வருடங்கள் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு பெற்றதாக பதவி உயர்வு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. காவல் துறையில் பதவி உயர்வு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. தலைமைக் காவலர் பதவியில் 10 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்து, மொத்தம் 25 ஆண்டுகள் சிறப்பு துணை ஆய்வாளராக பணியாற்றும் தலைமைக் காவலர்களை பதவி உயர்வு வழங்கப்படும். நகரங்களில் உள்ள ரேஞ்ச் துணை காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆணையர் ஆகியோருக்கு அதிகாரங்களை வழங்கி, வழிகாட்டுதல்களை […]
police tn government 2025

You May Like