இப்போதெல்லாம் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடைபெறுவது சர்வ சாதாரணமாகிவிட்டது. தற்போது பல்வேறு இடங்களில் நீதிமன்ற வளாகங்களில் கொடூரமான முறையில் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், ஹைதராபாத் உயர் நீதிமன்றம் நேற்று பரபரப்பாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அந்த நீதிமன்றத்தின் 6வது நுழைவாயில் முன்பு திடீரென்று ஒருவர் மற்றொருவரை பட்டாக்கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர். ஆனால் அவர் அதே இடத்தில் உயிரிழந்து விட்டார். உயிரிழந்தவர் நீதிமன்ற வளாகத்தின் அருகே இருக்கின்ற ஒரு தனியார் பொது கழிப்பிடத்தில் வேலை பார்த்து வந்த மிதுன் என்று காவல்துறையினரின் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது.
மேலும் இவருக்கும் இவரை கொலை செய்த நபருக்கும் 10,000 ரூபாய் கொடுக்க வாங்கலில் பிரச்சனை இருந்து வந்ததாக தெரிய வந்திருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தி கொலையாளியை தேடி வருகின்றன.