கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் ஆட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் 2500 ரூபாய் பணமும் வழங்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பிறகு பொங்கல் பரிசு தொகுப்பு என்று சொல்லி 21பொருட்களை மட்டுமே வழங்கிவிட்டு அத்துடன் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பணத்தை நிறுத்தி விட்டார்கள்.
இந்த சூழ்நிலையில், எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் பரிசுத்தொகுப்பில் பணம் இடம்பெறுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி மற்றும் அரசின் உயர் அதிகாரிகள் பங்கேற்று கொண்டார்கள். இந்த வருடம் 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்ட சூழ்நிலையில், சில பகுதிகளில் வெள்ளம் உருகி விட்டதாகவும், கரும்பு காய்ந்து போய் இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது.
ஆகவே இந்த வருடம் ரேஷன் கடைகளில் 1000 ரூபாய் பணத்துடன் பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்டவை மட்டும் வழங்கலாமா? என்பது தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் கிடைத்திருக்கிறது. இந்த தொகுப்பில் நெய் இடம்பெறவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால் சென்ற ஆண்டு இந்த பரிசு தொகுப்பில் நெய் இடம்பெற்று இருந்தது. ஆனால் இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்று சொல்லப்படுகிறது.