ஒருவரின் வாழ்வில் பல்வேறு தெய்வங்களை நாம் காணலாம். குலதெய்வம், இஷ்டதெய்வம், வழிபாடு தெய்வம், மந்திர தெய்வம் என ஒவ்வொன்றும் தனித்தனி பங்களிப்பை வழங்கினாலும், அதில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் குலதெய்வத்திற்கு தான் வழங்கப்படுகிறது. காரணம், இது யாரும் உருவாக்காத, வம்ச பரம்பரையாக வழிநடத்தப்படும் ஒரு தெய்வ வழிபாடாகும். பழமையான குடும்ப மரபுகளில், பண்டைய காலங்களில் வாழ்ந்த முன்னோர்கள் வழிபட்ட தெய்வம் குலதெய்வமாக மாறுகிறது. இந்த வழிபாடு வழியாக, ஒரு குடும்பத்தின் எல்லா […]

தமிழகத்தில் இன்று முதல் செப்டம்பர் 3-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட செய்தி குறிப்பில்; ஒடிசா கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு ஒடிசா பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து சத்தீஸ்கரில் நிலவுகிறது. நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை […]

போலந்தில் நடைபெற்ற விமானக் கண்காட்சி ஒத்திகையின்போது போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ராணுவ விமானி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. போலந்தின் ராடோமில் விமானக் கண்காட்சி இந்த வார இறுதியில் நடைபெறவுள்ளது. இதற்காக ஒத்திகை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி, நேற்று நடைபெற்ற ஒத்திகையி போது அந்நாட்டு விமானப்படையின் F-16 போர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் ராணுவ விமானி ஒருவர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானியின் அடையாளம் உடனடியாகத் தெரியவில்லை. இதனை போலந்து […]

சுபமுகூர்த்த தினமான இன்று ஆகிய தேதிகளில் சார்பதிவாளர் அலுவலகங்களில் கூட்டுதலாக டோக்கன்கள் ஒதுக்கீடு செய்ய உத்தரவு. இது குறித்து தமிழக அரசின் பத்திர பதிவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினத்தன்று பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் […]

அமெரிக்காவின் வரிவிதிப்பால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு, உடனடி நிவாரணம் மற்றும் அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் மூலம் தொழிற்சாலைகள், பணியாளர்களை காக்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பு நடவடிக்கை, தமிழகத்தின், குறிப்பாக பின்னலாடை மையமான திருப்பூரின் ஏற்றுமதி வர்த்தகத்தை பெரிதும் பாதித்துள்ளது. ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வர்த்தகம் பாதிக்கப்படுவதோடு, பல்லாயிரக்கணக்கானோரின் வேலைவாய்ப்பும் பாதிப்படைந்துள்ளது. […]

டைமண்ட் லீக் இறுதிப்போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், 85.01 மீ., தூரம் ஈட்டி எறிந்து இந்தியா வீரர் நீரஜ் சோப்ரா 2வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் வெப்பர், 90.51 மீ., எறிந்து அபார சாதனையுடன் முதலிடத்தை பிடித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் சூரிச் நகரில் டைமண்ட் லீக்கின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் ஜெர்மனி வீரர் ஜூலியன் வெப்பர், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா, ட்ரினிடாட் & டொபாகோ வீரர் கெஷோர் வால்கட், கிரெனடாவின் […]

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தைப் பின்பற்றும் அனைத்து விதமான பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு செப்டம்பர் 10 முதல் 26-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதில் 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செப்.10-ல் தொடங்கி 25-ம் தேதி வரை நடைபெறும். மேலும், 6 முதல் […]

இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு பெண்களின் பாதுகாப்பு என்பது ஒரு சமூகப் பிரச்சினை மட்டுமல்ல, வளர்ச்சியின் திசையை தீர்மானிப்பதற்கான ஒரு வழிமுறையாகும். இந்த சூழலில் NARI- 2025 அறிக்கை ஒரு முக்கியமான முயற்சியாகும். அதன் உதவியுடன், பெண்கள் பாதுகாப்பு தொடர்பான அந்த அம்சங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன. நகர்ப்புறங்களில் 40% பெண்கள் தங்கள் சொந்த நகரங்களில் பாதுகாப்பற்றதாக உணர்கிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது. மோசமான தெரு விளக்குகள் மற்றும் போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் […]

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இடையே கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் என்றாலும், மன வேறுபாடுகள் ஒருபோதும் இருக்காது என்று ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.. மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்பைப் பேணுகிறது என்றும், இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் பாஜகவிடம் மட்டுமே உள்ளது என்றும் அவர் தெளிவுபடுத்தினார். “பல்வேறு விஷயங்களில், சங்கம் பரிந்துரைகளை வழங்க முடியும், ஆனால் முடிவு எப்போதும் பாஜகவிடம் உள்ளது” என்று அவர் மேலும் […]