ஏமனில் புதன்கிழமை இஸ்ரேல் மற்றொரு சுற்று கடும் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதில் குறைந்தது 35 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று ஹவுதி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் தாக்குதல், ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேலின் ஒரு விமான நிலையத்தை ட்ரோன் மூலம் தாக்கிய சில நாட்கள் கழித்தே நடந்துள்ளது. மேற்காசிய நாடான ஏமன், ஹவுதி பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்களுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்குகிறது. ஹவுதி படையினர் பாலஸ்தீனம் […]
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கூலி’. ஆகஸ்ட் 14ஆம் தேதியன்று உலகெங்கும் வெளியான இந்தப் படம், இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்று. ரஜினியுடன் ஸ்ருதிஹாசன், சத்யராஜ், நாகார்ஜூனா, உபேந்திரா, சௌபின் ஷாஹிர், அமீர் கான் எனப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் வெளியான முதல் நான்கு நாட்களிலேயே ரூ.400 கோடிக்கு மேல் வசூல் செய்ததாகப் படத்தைத் தயாரித்த சன் […]
உட்டா பள்ளத்தாக்கு பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது, பழமைவாத ஆர்வலரும், அதிபர் டொனால்ட் டிரம்பின் நெருங்கிய கூட்டாளியுமான சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டார். இளம் குடியரசுக் கட்சி வாக்காளர்களை அணிதிரட்டுவதில் செல்வாக்கு மிக்க பங்காற்றிய கிர்க், கல்லூரி நிகழ்வின்போது நடத்தப்பட்ட தாக்குதலில் இறந்துவிட்டதாக அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அனைத்துப் பகுதிகளிலும் அரசியல் வன்முறை அதிகரித்து வரும் நிலையில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் […]
சாதிய எண்ணம் கொண்ட ஆசிரியர்கள் வேறு பள்ளிக்கு மாற்றப்பட வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளைத் தவிர்க்கவும், நல்லிணக்கம் ஏற்படுத்தவும், வழிமுறைகளை வகுக்கவும் ஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைக்கப்பட்டது. அவரது பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் பள்ளிகளில் சாதி அல்லது வகுப்புவாத எண்ணத்தை மாணவர்களிடையே ஏற்படுத்தும் ஆசிரியர் மீது பெறப்படும் புகார் […]
திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், நம்பிக்கையோடு இந்த 5 கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் நிச்சயம் அதிசயம் நடக்கும் என கூறப்படுகிறது. இந்தக் கோவில்களில் ஒவ்வொன்றும் ஒரு தனித்துவமான வழிபாட்டு முறையைக் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றி இங்கு விரிவாகக் காணலாம். திருமணம் மற்றும் குழந்தை வரம் அருளும் தெய்வமாக மதுரை மீனாட்சி அம்மன் திகழ்கிறாள். பாண்டிய மன்னனின் குறை போக்க, அன்னை பராசக்தியே மகளாக அவதரித்த தலம் […]
மகளிர் உரிமை தொகையை ரூ.2,000 ஆக உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் அல்லது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை என்பது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் தோறும் உரிமைத் தொகையாக 1000 ரூபாயை அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தும் தமிழக அரசுத் திட்டமாகும். தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட சமூகநீதித் திட்டங்களிலேயே ஒரு மாபெரும் முன்னெடுப்பாக, இந்த மகத்தான ‘மகளிர் உரிமைத் தொகை’ வழங்கும் திட்டம் ஒன்றரை […]
இந்தியா, பல்வேறு கலாச்சாரங்கள் மற்றும் நம்பிக்கைகள் நிறைந்த நாடு. தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் சில பழக்கவழக்கங்கள், காலப்போக்கில் மூடநம்பிக்கைகளாகவும் பார்க்கப்படுகின்றன. கருப்புப் பூனை குறுக்கே போனால் கெட்ட சகுனம், வீட்டு வாசலில் எலுமிச்சை என நாம் அன்றாடம் பார்க்கும் இந்த நம்பிக்கைகளுக்கு பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். கருப்புப் பூனை குறுக்கே போவது : இந்தியாவில் மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளிலும் இந்த […]
லாரி எலிசன் முதல் முறையாக உலகின் மிகப் பெரிய பணக்காரராக மாறியுள்ளார். அவர் எலான் மஸ்க்கை பின்னுக்குத் தள்ளிவிட்டார். 81 வயதான லாரி எலிசனின் நிகர மதிப்பு 393 பில்லியன் டாலர்கள் (ரூ. 34.59 லட்சம் கோடி). அவர் ஆரக்கிளின் இணை நிறுவனர் ஆவார். AI- இயங்கும் மிகப்பெரிய கிளவுட் ஒப்பந்தம் காரணமாக ஆரக்கிளின் பங்குகள் உயர்ந்துள்ளன. இது அவரது செல்வத்தை ஒரே இரவில் 101 பில்லியன் டாலர்கள் (ரூ. […]
தைரியம் இருந்தால் நேரடியாக மோத வேண்டும். அதை விட்டு, ஆம்புலன்ஸ் மூலம் நாடகத்தை அரங்கேற்றுகின்றனர் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்பதை வலியுறுத்தி அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி மாநிலம் முழுவதும் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் பேசிய அவர்; முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று வந்துள்ளார். தொழில் முதலீட்டை ஈர்க்க செல்லவில்லை. […]
கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இது குறித்து ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில்; கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ‘நவராத்திரி கொலு செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1-ம் தேதிவரை நடைபெற உள்ளது. இந்த கொலு கொண்டாட்டத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைக்கிறார்.தினமும் மாலை 4 முதல் 5 மணிவரை நடைபெறும் வழிபாடு […]

