கல் உப்பு ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஆனால் அது அனைவருக்கும் சரியானதல்ல. யாரெல்லாம் இதை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், அது ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கல் உப்பு பெரும்பாலும் ஆரோக்கியமான விருப்பமாகக் கருதப்படுகிறது, இது செரிமானத்திற்கு நல்லது என்று நம்பப்படுகிறது. ஆனால் கல் உப்பு அனைவருக்கும் நன்மை பயக்காது என்பது உங்களுக்குத் தெரியுமா? கல் உப்பில் சோடியம் உள்ளது, இது இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். உயர் […]

இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்ளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்: ‘தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், 12-ம் தேதி […]

பீகாரில் மேற்கொள்ளப்பட்டதைப் போலவே, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுகுறித்து விவாதிக்க நேற்று (புதன்கிழமை) டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றது. நாள் முழுவதும் நடைபெற்ற கூட்டத்தில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் (CEO) பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து சுமார் […]

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு அரசு பள்ளிகள் பலிகடா ஆக்கப்படுவதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில், “திருச்சி மாவட்டம் உப்பிலியாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆலத்துடையான்பட்டி ஊராட்சியில், நூற்றாண்டு விழா கண்ட ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு விடுமுறை அளித்து, கடந்த 9-ம் தேதி, திமுக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் நடைபெற்றிருக்கிறது. திமுகவின் விளம்பர […]

லடாக்கின் கிழக்கு எல்லைகள் வழியாக சீனாவின் ஆதரவுடன் நடத்தப்பட்ட தங்கக் கடத்தல் கும்பலை புலனாய்வு அமைப்புகள் கண்டுபிடித்துள்ளன. 2024 ஆம் ஆண்டில் ஆயிரம் கிலோவுக்கு அதிகமான தங்கம் மீட்கப்பட்ட ஒரு பெரிய தங்கக் கடத்தலை விசாரித்து வந்த அமலாக்க இயக்குநரகம் இந்த சதித்திட்டத்தை கண்டுபிடித்தது. கடந்த ஆண்டு கிழக்கு லடாக்கில் உள்ள கட்டுப்பாட்டுக் கோடு அருகே அதிக அளவு தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான விசாரணையில், 2023 மற்றும் 2024 […]

ராமேசுவரம் – காசி கட்டணமில்லா ஆன்மிக பயணத்தில் பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்கள் அக்டோபர் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் இருந்து காசி விஸ்வநாதசுவாமி கோயிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இந்து சமய […]

நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராகவும், ஊழலுக்கு எதிராகவும் 2 நாட்களாக போராட்டங்கள் தீவிரமடைந்தது.. இதனால் அந்நாட்டில் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான ஆட்சி கவிழ்க்கப்பட்டு, ராணுவத்தின் கட்டுப்பாட்டில் நாடு உள்ளது.. இந்த நிலையில் இன்று ராணுவ ஹெலிகாப்டர்களின் உதவியுடன் நேபாள அரசாங்கத்தின் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் தப்பிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.. 3வது நாளை எட்டிய வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், போராட்டக்காரர்கள் அதிகாரிகளையும், […]

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற தலைவர்களை ஒன்றிணைத்தால் தான் தேர்தலில் வெற்றி பெற முடியும் என்று மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் கடந்த 5-ம் தேதி தெரிவித்தார்.. மேலும் 10 நாட்களுக்குள் இபிஎஸ் அதிமுகவை ஒருங்கிணைக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்றும் அவர் காலக்கெடு விடுத்தார்… ஆனால் அதற்கு அடுத்த நாளே செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.. மேலும் […]

நேபாளத்தில் Gen Z இளைஞர்களில் தலைமையில் நடந்து வரும் வன்முறை போராட்டங்களுக்கு மத்தியில், நேற்று பிரதமர் கே.பி. சர்மா ஒலி மற்றும் அவரது அரசாங்கத்தை கவிழ்க்கப்பட்டது.. இதையடுத்து நேபாள இராணுவம் நாட்டின் கட்டுப்பாட்டைக் கைப்பற்றியுள்ளது. மேலும் இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கும் ஒழுங்கை மீட்டெடுக்கவும் இன்று போராட்டக்காரர்களிடையே பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன. 4,000 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஒரு ஆன்லைன் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. அப்போது கார்க்கியின் பெயர் இராணுவத்துடன் […]