வளர்ந்த நாடுகளில் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் தற்போது பெருங்குடல் புற்றுநோயின் தாக்கம் அதிகரித்து வருவது, சுகாதாரத் துறையை கதிகலங்க செய்துள்ளது. அமெரிக்காவில், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, பெருங்குடல் புற்றுநோய் நான்காவது அதிகமாக காணப்படும் புற்றுநோயாகும். அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் தரவுகளின் அடிப்படையில், ஆண்களில் 24 பேரில் ஒருவருக்கும், பெண்களில் 26 பேரில் ஒருவருக்கும், அவர்களின் வாழ்நாளில் இந்த நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்தியாவிலும் […]

வேப்ப இலைகளால் பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறுங்கள். பருக்கள், தழும்புகளை நீக்கி, முகத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும் வேம்பின் எளிய வீட்டு வைத்தியங்களை அறிந்து கொள்ளுங்கள். அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் மாசுபாடு, தூசி, ரசாயன பொருட்கள் மற்றும் மோசமான உணவுப் பழக்கவழக்கங்களால், முகத்தின் பளபளப்பு மங்கிவிடும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் இயற்கையான வழியைப் பின்பற்ற விரும்பினால், வேப்ப இலைகள் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக […]

அமெரிக்க குடியரசுக் கட்சி செனட்டர் மைக் லீ, H1B விசாக்களை தடை செய்வதற்கான சாத்தியக்கூறுகளை எழுப்பியுள்ளார். சமூக ஊடக தளமான ட்விட்டரில் ஒரு பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக, H1B விசாக்களை தடை செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்ற கேள்வியை அவர் எழுப்பினார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்திய H1B ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வால்மார்ட் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்த சம்பவத்திற்காக உலகளாவிய தொழில்நுட்பப் […]

ஆன்மீகம் என்றாலே நம் மனதில் பல கேள்விகள் எழும். இதெல்லாம் செய்யணுமா..? இதற்கு என்ன அர்த்தம்..? என்று பலவிதமான சந்தேகங்கள் எழும். அந்த சந்தேகங்கள் வழியாகவே நாம் தெளிவையும், ஆன்மீகப் புரிதலையும் பெறுகிறோம். அதனை அடைவதற்கான ஆரம்ப கட்டமாக சில பொதுவாக எழும் கேள்விகளும், அவற்றுக்கான காரணங்கள் குறித்தும் இந்தப் பதிவில் பார்க்கலாம். விளக்கேற்றும் போது பூ சாத்துவது அவசியமா? சிலர், சுவாமி படத்திற்கு பூவில்லாமல் வழிபடலாமா எனக் கேட்பர். […]

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் இரிக்கூர் பகுதியில் வசித்து வந்த சுபாஷ் என்பவர் துபாயில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தர்ஷிதாவின் (22) சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹுன்சூர் ஆகும். இந்த தம்பதிக்கு இரண்டரை வயதில் ஒரு குழந்தையும் உள்ளது. தனது, கணவனுடன் கேரளாவில் வசித்து வந்தார் தர்ஷிதா. அண்மையில், சுபாஷின் வீட்டில் இருந்து 30 பவுன் நகையும், சுமார் 5 லட்சம் ரூபாய் பணமும் மாயமானது. […]

நாட்டில் சமீப காலமாக கணவன்-மனைவி சம்பந்தப்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொலை வழக்கில் ஒரு பெண் தனது கணவரால் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டதாகக் கூறப்படுவது நாடு முழுவதையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது, இந்தநிலையில் தற்போது தெலுங்கானாவில் அதேபோன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, கணவன் தனது மனைவியை பட்டினி போட்டு சித்திரவதை செய்து மிருகத்தைப் போல அடித்துக் கொன்றதாகவும் கூறப்படும் மற்றொரு வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தெலுங்கானாவின் […]

30 ஆண்டுகளாக திரைப்பட உலகில் இருந்தாலும், பாலிவுட் துறை தனது பணியை முழுமையாக அறியவில்லை என்றும் பாலிவுட் சினிமாவில் கொடுக்கப்படும் சம்பளம், தென்னிந்திய சினிமாவில் பெறும் சம்பளத்தில் பத்து சதவீதம் (1/10) மட்டுமே என்று நடிகை சிம்ரன் பேசியுள்ளார். தென்னிந்திய ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த சிம்ரன், திரையுலகில் அறிமுகமான ‘சனம் ஹர்ஜை’ திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. அத்தோடு சிம்ரனும் சினிமாவில் 30 ஆண்டுகளை நிறைவு செய்திருக்கிறார். […]

நம் பரம்பரையில் நாகதோஷம் என்பது ஒரு முக்கியமான ஜோதிட சிக்கலாகவே பார்க்கப்படுகிறது. இதனை தீர்க்க பலர் கோவில்களில் பால், மஞ்சள் போன்றவற்றைக் கொண்டு நாக பாம்புகளின் சிலைகளுக்கு அபிஷேகம் செய்வதைக் காணலாம். குறிப்பாக, அரச மரத்தடியில் பல நாகர் சிலைகள், இந்த வழிபாட்டின் பாரம்பரிய அடையாளமாக விளங்குகின்றன. ஆனால், நாகதோஷம் நிரந்தரமாக விலக ஒரு தனிப்பட்ட பரிகார முறையைப் பரிந்துரைத்தவர் போகர் சித்தர். புகழ்பெற்ற சித்தர்களில் ஒருவரான போகர், தனது […]

ஜோதிடத்தில் மட்டுமல்ல, வாஸ்து சாஸ்திரத்திலும், விநாயகருக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.. விநாயகர் தடைகளை நீக்குபவர், புத்திசாலித்தனம், நினைவாற்றல் மற்றும் அறிவு வலிமையை அதிகரிக்கும் கடவுள் என நம்பப்படுகிறது. மேலும், புத்தி மற்றும் தொடர்பு திறன்களுக்கு காரணமான புதன் கிரகத்துடன் விநாயகர் ஒரு குரு-சிஷ்ய உறவைக் கொண்டுள்ளார்.. விநாயகரின் இரண்டு மனைவிகளில் ஒருவரின் பெயர் ‘புத்தி’ என்பது குறிப்பிடத்தக்கது. வாஸ்து சாஸ்திரத்தில், பல வகையான பிரச்சினைகளுக்கு தீர்வாக விநாயகர் முதலில் வணங்கப்படுகிறார். […]