New party joins AIADMK alliance.. Stalin shocked..!
ஒப்பனை என்பது அழகின் ஓர் அங்கமாக நிகழ்வது மட்டுமின்றி, தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாகவும் மாறியுள்ளது. அந்த வகையில், பெண்களின் தினசரி ஒப்பனையில் முக்கிய இடம் பிடிப்பது லிப்ஸ்டிக். ஆனால் இந்த சிறிய அழகு சாதனம், அழகை அதிகரிக்கக் கூடியதோடு, சில சந்தர்ப்பங்களில் ஆரோக்கியத்துக்கும் எதிரியாக மாறிவிடுகிறது. சமீபத்தில் வெளியான ஓர் வீடியோவில், எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மனன் வோரா, லிப்ஸ்டிக் தொடர்பான முக்கியமான எச்சரிக்கையை பகிர்ந்துள்ளார். அவரது […]
ஒரே கொசுத்தொல்லையா இருக்குப்பா!. கொசுக்களை விட எரிச்சலூட்டுவது வேறு எதுவும் இல்லை. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி, பூச்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த உலக கொசு தினம் நினைவுகூரப்படுகிறது. மலேரியா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற கொசுக்களால் பரவும் நோய்கள் மனித உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளன. இந்த கொசுக்களை தங்கள் வீடுகளிலிருந்து விரட்ட இயற்கையான ஆனால் பயனுள்ள வழிகள் உள்ளன. இன்று (ஆக.20) உலக கொசு தினம் […]
சொத்துக்கள் பாகப்பிரிவினை வழக்குகள் அனைத்தும் ஆறு மாதத்திற்குள் முடிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அனைத்து கீழமை நீதிமன்றங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சொத்துக்கள் பாகப்பிரிவினை என்பது ஒரு குடும்பத்தின் சொத்துக்களை, சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு இடையே பிரித்து வழங்கும் முறையாகும். இது பொதுவாக குடும்பச் சொத்துக்களுக்குப் பொருந்தும், மேலும் இது ஒரு உடன்படிக்கை பத்திரம் மூலம் செயல்படுத்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் பாகப்பிரிவினை தொடர்பான வழக்குகள் அதிகமாக நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. […]
பெருமாள் கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் துளசி தீர்த்தம், பலருக்கும் ஒரு ஆன்மீக நம்பிக்கையின் அடையாளமாக இருக்கலாம். ஆனால், அந்த தீர்த்தத்தில் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கும்போது, அது வெறும் ஆன்மீக நிகழ்வாக மட்டுமின்றி, மனித உடலுக்கான ஒரு இயற்கை மருந்தாகவும் பார்க்கப்படுகிறது. துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய் போன்ற இயற்கை மூலிகைகள் தீர்த்தத்தில் சேர்க்கப்படுவதால், அது நமது உடலுக்கு பல வகையான நன்மைகளை தருகிறது. துளசி, அதன் நோய் எதிர்ப்பு […]
நதீன் அயூப்பின் மிஸ் யூனிவர்ஸ் 2025 அறிமுகம், பாலஸ்தீனத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது பங்கேற்பாகும். தன்னம்பிக்கை, அழகு, உறுதியுடன் அவர் தனது நாட்டின் பெருமையை உலக அரங்கில் கொண்டு செல்கிறார். வரலாற்றில் முதல் முறையாக, பாலஸ்தீன் மிஸ் யூனிவர்ஸ் அழகிப்போட்டியில் பங்கேற்கிறது. இந்த வளர்ச்சி, நீண்ட காலமாக வெறும் அழகுப் போட்டியாக மட்டுமே பார்க்கப்பட்டு வரும் சர்வதேச போட்டிக்கு ஒரு மைல்கல்லை குறிக்கிறது. வரும் உலகளாவிய அழகிப்போட்டியில் 27 வயதான […]
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தெற்கு குஜராத் வடக்கு கேரளா பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடகிழக்கு-தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது […]
ஓய்வூதியர் பணப்பலன் வழங்குவதற்காக ரூ.1,137 கோடியை போக்குவரத்துக் கழகங்களுக்கு தற்காலிக முன்பணமாக (கடன்) தமிழக அரசு வழங்கியுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத் துறைச் செயலர் சுன்சோங்கம் ஜடக்சிரு பிறப்பித்த உத்தரவில்: போக்குவரத்துக் கழகங்களில் கடந்த 2023-ம் ஆண்டு ஜூலை முதல் நடப்பாண்டு ஜனவரி வரை ஓய்வு, விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கும், பணிக்காலத்தில் மரணமடைந்தவர்களுக்கும் பணப்பலன் வழங்கும் வகையில் நிதியுதவி கோரி போக்குவரத்துத் துறைத் தலைவர் கடிதம் அனுப்பியிருந்தார். இதை பரிசீலித்த அரசு, […]
தமிழர்களின் பாரம்பரியத்தில், குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. ஒரு குடும்பத்தின் வெற்றி, வளம், சுபிட்சம் ஆகிய அனைத்துக்கும் அடித்தளமாகக் கருதப்படும் குலதெய்வத்தின் அருளை, ஒவ்வொருவரும் அடைய வேண்டும் என்ற எண்ணம் தொன்மை காலத்தில் இருந்தே இருந்து வருகிறது. சிலரால் தான் சொந்த ஊருக்குச் சென்று குலதெய்வத்தை வழிபட முடியும். வேறு ஊரில் வசிப்பவர்களுக்கு, குடும்ப சூழல், வேலை போன்ற காரணங்களால், குலதெய்வ தரிசனத்திற்கு இடையூறுகள் ஏற்படக்கூடும். இதற்கான […]
2025 ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் ஆகிய அணிகளுடன் இணைந்து இந்தியா குரூப் ஏ-வில் இடம் பெற்றுள்ளது. பிராந்தியப் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் அறிவித்துள்ளார். முதல் முறையாக டி20 போட்டியில் விளையாடும் வீரர்களின் பட்டியல் விவரங்களை அறிந்துகொள்ளுங்கள். ஆசிய கோப்பை ‘டி-20’ கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு எமிரேட்சில் (செப். 9-28) நடக்க உள்ளது. டி20 […]

